tag:blogger.com,1999:blog-51952574222109236302024-02-20T10:01:54.665-08:00கோகுலத்தில் ஒரு ஏகலைவன்என்னை கவர்ந்திழுத்த நீ... எங்கே இருக்கிறாய் சொல்....Unknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-38757744888182082482008-03-03T06:11:00.000-08:002008-03-04T05:56:09.201-08:00நுழைவாயில்....<p><span style="color:#660000;">கவிதைகள்..</span></p><p><br /><span style="color:#339999;"> <a href ="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/02/blog-post_08.html"> நந்தவன நிலா..</a> </span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/01/blog-post_30.html">காதல் முதல் காதல் வரை </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/01/blog-post_23.html">தலையணை விடு தூது... </a> </span></p><p><span style="color:#339999;"> <a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/01/blog-post_22.html">மருதாணிச்செடியில் பூத்த மல்லிகை </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/01/blog-post_07.html">வலைகள் வைத்திருக்கும் அலைகள் </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/01/blog-post.html">எது சொன்னால் விழுவேன்... </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/12/blog-post_19.html">கண்ணெழுத்துக்களின் பிம்பம்...</a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/12/blog-post_04.html">மகரந்தப் பூக்கள்.... </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/12/blog-post.html">நிலாவோடு வாழ்பவன்.... </a> </span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/11/blog-post_18.html">கனவுகளில் இருந்து களவாடியவை..</a> </span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/11/blog-post_2255.html">காத்திருப்புக்களின் கையிருப்புகள் </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/11/blog-post_02.html">ஆதலினால்.... </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/10/blog-post_2365.html">ஈத்தைகள் </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/10/blog-post_27.html">சிக்கு(ம்) கோலங்கள்.... </a> </span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/02/blog-post.html">மௌனத்தின் பட்டிமன்றம்...</a></span></p><p><br /><span style="color:#660000;">கட்டுரைகள்...</span></p><p><br /><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/10/blog-post.html">புத்தகம் மூடிய மயிலிறகு..</a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/10/blog-post_30.html">மைக் டெஸ்டிங்..ஒன்..டூ...த்ரி... </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/11/blog-post.html">கும்பிடப் போன தெய்வம் </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/11/blog-post_23.html">தரை மேல் பிறப்போம்.. தண்ணீரில் மிதப்போம்...</a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2007/11/blog-post_12.html">டூரிங் டாக்கீஸ் கனவுகள்.. </a></span></p><p><span style="color:#339999;"><a href="http://gokulaththiloruekalaivan.blogspot.com/2008/02/blog-post_25.html">இரண்டும் இரண்டும் இருபத்திரண்டு</a></span></p>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-764427515136855722008-02-25T05:50:00.000-08:002008-03-03T06:00:25.554-08:00இரண்டும் இரண்டும் இருபத்திரண்டுஎனது பள்ளி நாள் தோழியை பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.. பரபரப்பின் உச்சமான சென்னை மாநகரத்தின் தெருவொன்றில் அதே பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவின்றி ஓடிக்கொண்டிருந்தவளை அடையாளம் கண்டுபிடித்து நிறுத்தி பேசத்தொடங்கினேன்... பொதுவான பரஸ்பர விசாரிப்புகளை அடுத்து தனது கையில் இருந்த அவளது குழந்தையை எனக்கு அறிமுகப் படுத்தினாள்.. சுமார் இரண்டு வயதிருக்கும் அந்தக் குழந்தைக்கு... அந்த வயதுக்கே உரிய துருதுருப் பார்வையோடு இருந்தது... நான் அந்தக்குழந்தையோடு பேச ஆரம்பிக்கும் போதே தனது பரபரப்பின் காரணத்தை விளக்கத் தொடங்கினாள் அவள்..<br /><br />"இவனுக்கு அட்மிஷன் இருக்கு..அதுக்காக தான் ஓடிகிட்டே இருக்கேன் என்றாள்..." ஆச்சர்யம் மேலிட இந்தப் பையனுக்கு எத்தனை வயசாகுது என்று கேட்கலானேன்..எனது அந்தக் கேள்வியின் தொடர்ச்சியாய் எனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அறியாதவனாய்... இவனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு.. என்றாள்... "அதற்குள் எதற்காக பள்ளியில் சேர்க்க வேண்டும்..அதுவும் இத்தனை பரபரப்பாக எதற்காக ஓட வேண்டும் என்ற என் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாய் அவள் பதில் சொல்லத்தொடங்கினாள்.. " இதுக்கே அட்மிஷன் கிடைக்க எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கு தெரியாது. நாளைக்கு இன்டர்வியு வேறு இருக்கு.." என்றாள்.. இரண்டு வயதுக் குழந்தையிடம் என்ன நேர்முகத்தேர்வு செய்வார்கள்?? எனது குழப்பத்தைக் கண்டவளாய் அவளே அதற்கும் பதில் சொன்னாள்.."இன்டர்வியு இவனுக்கு இல்ல... எனக்கும் இவங்க அப்பாவுக்கும் தான் என்று.." அதிர்ச்சி அலை முகத்தில் ஓங்கி அறைந்தது எனக்கு... இவனைப் பள்ளியில் சேர்ப்பதற்கு உங்கள் இருவரிடமும் என்ன கேட்கப் போகிறார்கள்?? என்றேன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்... "நாங்க எப்படி சொல்லிக்கொடுப்போம் வீட்டுலனு கேப்பாங்க.." என்றாள்.. இதென்ன பைத்தியக்காரத்தனம்..பள்ளியில் சேர்ப்பதே சொல்லிக் கொடுக்கத்தானே..அதை நீங்களே செய்துவிட்டால் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற என் கேள்வி அவளை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம்..அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "இது சிட்டிலயே பெரிய ஸ்கூல்..அதுவும் இல்லாம ரைம்ஸ் எல்லாம் நல்லா சொல்லித்தராங்க.." என்று பொறுமையாக விளக்கம் சொல்லிக்கொண்டே போனாள்... இவன் கூட நல்லா ரைம்ஸ் எல்லாம் சொல்லுவான்..என்று சொல்லியவள்.."அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லிக்காட்டு என்றாள்... மழலை மாறாத அந்தப் பச்சைக் குழந்தை<br /><br />"ரெயின் ரெயின் கோ அவே... கம் அகைன் அனதர் டே..." என்று சொல்லத்தொடங்கியது...<br /><br />காவிரித்தண்ணீருக்காக கர்நாடக மாநிலத்திடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் தமிழகத்தில்..<br />வருகிற மழையையும் வராதே என்று பாட, பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கிற பள்ளிக்குத்தான் இத்தனை போராட்டமா??? என்று நான் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பதை அறியாமல், "பாத்தீங்களா..இதுக்கு தான் இவ்ளோ கஷ்டப் படறதும்..." என்றாள்.. கடைசியாக அவளிடம் ஒன்றைக் கேட்டே தீருவது என்று தீர்மானித்தவனாய்.."அப்படியே இருந்தாலும் இந்தக் குழந்தைக்கு ரெண்டு வயசு தானே ஆகுது.. மூணு வயதில் தானே எல்.கே.ஜி யில் சேர்ப்பார்கள்???" என்று கேட்டேன்.. அதிர்ச்சியின் எல்லைக்கே நான் சென்று விழும்படி ஒரு பதில் வந்தது அவளிடமிருந்து... "இது எல்.கே.ஜி அட்மிஷன் இல்ல... ப்ரீ.கே.ஜி அட்மிஷன்.. அப்டியே விட்டுடா அவங்களே எல்.கே.ஜி ல போட்டுடுவாங்க" என்று சர்வசாதாரணமாய் பதில் சொன்னாள்... "நம்ம காலம் எல்லாம் வேறங்க...இதுக்கே நான் மூணு நாளா வரிசயில நின்னு இன்னிக்கு தான் கெடச்சிருக்கு என்றபடி தனது ஓட்டத்தை தொடரலானாள்...அதற்கு மேலும் அவளிடம் பேச எதுவும் தோன்றாமலும், விரும்பாமலும் பேசாது இருந்தேன்..இருந்தாலும் கடைசியாய் அவள் சொல்லிப்போன வரி என்னை பின்னோக்கி அழைத்துச் சென்றது...<br /><br />ஐந்து வயதில் என்னை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக நடந்த நிகழ்வுகளை எல்லாம் மனசு அசைபோடத் தொடங்கியது.. வீட்டில் பெரியவர்கள் பார்த்த நாள் ஒன்றில் தெருவே அதிரும் படியாக நான் போட்ட கூப்பாடுகளுக்கும், கால்களையும் கைகளையும் உதைத்துக் கொண்டு "நான் போமாட்டேன்..போமாட்டேன்... என்ன விடுடா..என்ன விடுடி" (அந்த நேரத்தில் என்னிடம் மரியாதை எதிர்பார்ப்பது தவறு...) என்று நான் அடித்த ரகளைகளுக்கும் இடையில் வெள்ளைச் சட்டை, நீலக் கால்சட்டையில் இருந்த என்னை சைக்கிளின் கேரியரில் திணித்து, எனது பையை அப்பாவே தனது தோளில் தொங்கவிட்டபடி பள்ளிக்கு அழைத்துச் சென்ற சம்பவங்களும் நினைவுக்கு வந்தது...ஊரில் அப்பா பெரிய மனிதர் என்பதால் பள்ளியில் எனக்கு பெஞ்சில் இடம் கிடைக்கும் முன்பே என் அப்பாவுக்கு நாற்காலி கிடைத்தது.. பையில் எடுத்து வந்திருந்த ஆரஞ்சு சுளை மிட்டாய்களை என் சார்பாக டீச்ச்ரே வழங்கினார்... எனக்கு கொடுத்த மிட்டாயில் அதுவரை நான் அடித்த கொட்டங்களும் அழுகையும் முனகல்களோடு மெல்லக் கரையத்தொடங்கியது...<br /><br />மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தேன்..ஆனால் கேள்விகள் மட்டும் என்னை துரத்திக் கொண்டே இருக்கின்றன.. இவளைப் போலவே இன்னொரு இடத்தில் நான் கேட்ட செய்தி இன்னும் எனக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கிறது.. "எங்க பையன் இப்பொவே எவ்ளோ நல்லா கராத்தே சண்டை போடறான் தெரியுமா??" என்ற ஒரு தகப்பனைப் பார்த்து விக்கித்துப் போனேன்.. ரெண்டு வயதுப் பிள்ளை படிக்கக் கற்றுக்கொள்வதில் கூட ஒரு பெற்றோருக்கு பெருமை இருக்கலாம்... ரெண்டு வயதுப் பிள்ளை அடிக்கக் கற்றுக்கொள்வது என்ன பெருமை என்று இன்னமும் எனக்கு விளங்கவே இல்லை... தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வந்தேன்..<br /><br />ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் இன்று பொறுப்பான பதவியில் இருக்கும் நாங்கள் எல்லாம் பள்ளிப் பருவத்தில் இதையா கற்றுக்கொண்டு வந்தோம்... பள்ளியின் அளவு பெரியதாக இருப்பதால் மட்டும் இரண்டும் இரண்டும் சேர்ந்தால் இருபத்திரண்டா வரப்போகிறது... இதே நிலை நீடித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து முதலிரவு அறைக்குச் செல்லு முன்னே பள்ளியில் சேர்க்கும் விண்ணப்படிவத்தோடு தான் செல்ல வேண்டும் போலிருக்கிறது..."எப்படியும் ஒரு வருஷத்துல எதாவது ஒண்ணு பொறந்துரும் சார்..இப்போவே சீட்ட குடுத்துட்டீங்கன்னா..பின்னாடி அலைய வேண்டி இருக்காது பாருங்க.." என்று கேட்கிற நிலையும் வரலாம்...<br />ஆரஞ்சு மிட்டாய் கரைந்து போய்விட்டது... நினைவுகளுக்கும் மனசாட்சியின் கேள்விகளுக்கும் மட்டும் சக்தியில்லை.. கரைந்து போவதற்கு...Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-34295928096867963302008-02-08T20:45:00.000-08:002008-03-03T06:00:19.040-08:00நந்தவன நிலா..<span style="color:#339999;">இரவில் பூக்கும்</span><br /><span style="color:#339999;">வெளிச்சப் பூக்கள்</span><br /><span style="color:#339999;">இரவல் கேட்கின்றன</span><br /><span style="color:#339999;">நறுமணத்தை</span><br /><br /><span style="color:#339999;">உன் கூந்தலில் </span><br /><span style="color:#339999;">குடியேறும் ஆசையில்</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">குயில்கள் கூடித்</span><br /><span style="color:#339999;">தீர்மானம் போட்டிருக்கின்றன...</span><br /><br /><span style="color:#339999;">உன் வீட்டு</span><br /><span style="color:#339999;">குளியலறையில்</span><br /><span style="color:#339999;">கூடுகட்டிக் கொள்வதென்று...</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">ஆளுநர் கையெழுத்து</span><br /><span style="color:#339999;">இல்லையேல்</span><br /><span style="color:#339999;">செல்லாக்காசாம்</span><br /><br /><span style="color:#339999;">இதயத்தில் கையெழுத்திடு...</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">ஒரு கன்னத்தில் அறைந்தால்</span><br /><span style="color:#339999;">மறு கன்னத்தை காட்டுவேன்</span><br /><br /><span style="color:#339999;">ஓங்கி அறைந்திருக்கிறாய்</span><br /><span style="color:#339999;">உன் கண்களால்</span><br /><span style="color:#339999;">என் ஒற்றை இதயத்தில்..</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">என் இதயம்</span><br /><span style="color:#339999;">திறந்த புத்தகமென்று</span><br /><span style="color:#339999;">யார் உனக்கு சொன்னது?</span><br /><br /><span style="color:#339999;">புரட்டி எடுத்துவிட்டு செல்கிறாயே</span><br /><br /><span style="color:#339999;">*******************************</span><br /><br /><span style="color:#339999;">இதயத்திற்கு</span><br /><span style="color:#339999;">எந்த கண்ணாடியிட்டு</span><br /><span style="color:#339999;">மறைப்பது</span><br /><br /><span style="color:#339999;">காதல் வலி பரவாமல் தடுக்க.</span><br /><br /><span style="color:#339999;">*******************************</span><br /><br /><span style="color:#339999;">நீ</span><br /><span style="color:#339999;">புத்தகமா?</span><br /><span style="color:#339999;">புல்லாங்குழலா?</span><br /><span style="color:#339999;">தெரியவில்லை</span><br /><br /><span style="color:#339999;">ஆனால்</span><br /><span style="color:#339999;">தீர்மானித்து விட்டேன்</span><br /><span style="color:#339999;">"வாசிப்பது" என்று..</span><br /><br /><span style="color:#339999;">****************************</span><br /><br /><span style="color:#339999;">செவ்வாயில் </span><br /><span style="color:#339999;">பனிக்கட்டி இல்லை என்று</span><br /><span style="color:#339999;">யார் சொன்னது?</span><br /><br /><span style="color:#339999;">நீ தான் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயே..</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">காதல் நிர்ணயம் செய்கிறது</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">முதலெழுத்துக்களையும்</span><br /><span style="color:#339999;">தலையெழுத்துக்களையும்</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">******************************** </span><br /><br /><span style="color:#339999;">கைகளில் கோரிக்கை மனுவோடு</span><br /><span style="color:#339999;">காத்திருக்கிறேன்...</span><br /><br /><span style="color:#339999;">நீ ஏற்றுக்கொண்டால்</span><br /><span style="color:#339999;">நான் ஆயுள்கைதி</span><br /><span style="color:#339999;">நிராகரித்தால் </span><br /><span style="color:#339999;">நான் தூக்குக் கைதி...</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">ஒவ்வொரு அரிசியிலும்</span><br /><span style="color:#339999;">அதை உண்பவன் பெயர்</span><br /><span style="color:#339999;">எழுதியிருக்கிறது...</span><br /><br /><span style="color:#339999;">ஒவ்வொரு பூவிலும்</span><br /><span style="color:#339999;">உன் பெயர் தான் இருக்கிறது...</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">உன்னை முதலில்</span><br /><span style="color:#339999;">என் அம்மாவிடம் தான்</span><br /><span style="color:#339999;">அறிமுகப்படுத்தவேண்டும்..</span><br /><br /><span style="color:#339999;">அவள் தான்</span><br /><span style="color:#339999;">உன் வீதியில் என்னை</span><br /><span style="color:#339999;">"பார்த்துப் போ"</span><br /><span style="color:#339999;">என்று சொல்லியனுப்பியது....</span><br /><br /><span style="color:#339999;">******************************<br /></span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-2640365445369372912008-02-02T04:49:00.000-08:002008-03-03T05:58:54.603-08:00மௌனத்தின் பட்டிமன்றம்<span style="color:#339999;">நீ என்னைத்</span><br /><span style="color:#339999;">தள்ளிவிட்ட இடத்தில்</span><br /><span style="color:#339999;">என்னைத் தாங்கிப் பிடித்துகொண்டது</span><br /><span style="color:#339999;">காதல்...</span><br /><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">நம் இருவருக்கும் </span><br /><span style="color:#339999;">இடையில் வர</span><br /><span style="color:#339999;">யாருக்கும் துணிவில்லை</span><br /><br /><span style="color:#339999;">காதலைத் தவிர....</span><br /><br /><span style="color:#339999;">*******************************</span><br /><br /><span style="color:#339999;">ஆப்பிள் மரம்</span><br /><span style="color:#339999;">அப்படியே தான் இருக்கிறது...</span><br /><br /><span style="color:#339999;">நியூட்டன்கள் தான்</span><br /><span style="color:#339999;">விழுந்து கொண்டிருக்கிறார்கள்</span><br /><span style="color:#339999;">காதலில்....</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><br /><span style="color:#339999;">இதயத்தில் தரைதட்டி நிற்கிறது</span><br /><br /><span style="color:#339999;">நேற்று பெய்த மழையில்</span><br /><span style="color:#339999;">நீ மிதக்கவிட்டு மகிழ்ந்த</span><br /><span style="color:#339999;">கத்திக்கப்பல்.....</span><br /><br /><span style="color:#339999;">************************</span><br /><br /><span style="color:#339999;">நாம் இருவருமே </span><br /><span style="color:#339999;">சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறோம்...</span><br /><br /><span style="color:#339999;">யார் முதலில் பேசுவது</span><br /><span style="color:#339999;">என்ற</span><br /><span style="color:#339999;">மௌனத்தின் பட்டிமன்றத்தில்....</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><br /><span style="color:#339999;">நீ ஆசையாய் வளர்க்கும்</span><br /><span style="color:#339999;">பூச்செடிகள் பூத்திருக்கின்றன...</span><br /><br /><span style="color:#339999;">என் காதலுக்கா?</span><br /><span style="color:#339999;">என் காதுகளுக்கா?</span><br /><br /><span style="color:#339999;">*****************************</span><br /><br /><span style="color:#339999;">பூக்கோலத்துக்கு நடுவே</span><br /><span style="color:#339999;">புள்ளிகள்..</span><br /><br /><span style="color:#339999;">மச்சம்...</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><br /><span style="color:#339999;">கோயில் யானை</span><br /><span style="color:#339999;">உன்னை ஆசீர்வதித்தது...</span><br /><br /><span style="color:#339999;">உன் கன்னத்தில் துதிக்கையை வைத்து...</span><br /><br /><span style="color:#339999;">*******************************</span><br /><br /><span style="color:#339999;">பட்டாம் பூச்சி பிடிக்கத் திரிந்தவன்</span><br /><span style="color:#339999;">நான்...</span><br /><br /><span style="color:#339999;">பட்டாம் பூச்சியாக்கி திரியவிட்டிருக்கிறாய்</span><br /><span style="color:#339999;">நீ....</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><br /><span style="color:#339999;">தூண்டில்காரர்களை பிடிப்பதற்காகவே</span><br /><span style="color:#339999;">வளர்ந்திருக்கின்றன</span><br /><span style="color:#339999;"><br />உன் விழி மீன்கள்....</span><br /><br /><span style="color:#339999;">****************************</span><br /><br /><span style="color:#339999;">பார்த்துப் போ...</span><br /><br /><span style="color:#339999;">தேர் வருகிறது என்று தெரிந்து</span><br /><span style="color:#339999;">வழியில்</span><br /><span style="color:#339999;">முண்டியடிக்கின்றன</span><br /><span style="color:#339999;">முல்லைக் கொடிகள்....</span><br /><br /><span style="color:#339999;">**************************<br /><br /></span><span style="color:#339999;"></span>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-48078183945982012422008-01-30T02:03:00.000-08:002008-03-03T05:56:55.839-08:00காதல் முதல் காதல் வரை<span style="color:#339999;">கைகளில் ஏந்திக்கொள்</span><br /><span style="color:#339999;">இல்லையேல்</span><br /><span style="color:#339999;">அணைத்துவிட்டாவது போ..</span><br /><br /><span style="color:#339999;">முனகிக் கொண்டேயிருக்கிறோம்</span><br /><span style="color:#339999;">செல்பேசியும் நானும்...</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><br /><span style="color:#339999;">இந்த உலகிற்கு வருவதற்காக</span><br /><span style="color:#339999;">நீ உடைத்தது</span><br /><span style="color:#339999;">உன் தாயின் பனிக்குடத்தையா?</span><br /><span style="color:#339999;">இல்லை பாற்குடத்தையா?</span><br /><br /><span style="color:#339999;">***********************</span><br /><br /><span style="color:#339999;">என்னுடைய தவங்கள் எல்லாம்</span><br /><span style="color:#339999;">உன்னிடம் வரம் வாங்க அல்ல</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">உன்னையே வரமாய் வாங்கத்தான்...</span><br /><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">கடிதத்தின் மீது ஒட்டியிருக்கும்</span><br /><span style="color:#339999;">அஞ்சல் தலை மாதிரி</span><br /><span style="color:#339999;">இதயத்தில் நீ</span><br /><br /><span style="color:#339999;">எடுத்துவிட்டால் மதிப்பில்லை அதற்கு....</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">உன் இதழ்களின் அழைப்புக்காக</span><br /><span style="color:#339999;">காத்திருந்தபோது தான் வந்தது</span><br /><span style="color:#339999;">உன் அழைப்பிதழ்</span><br /><br /><span style="color:#339999;">"அவசியம் வருக" என்ற வாசகத்துடன்...</span><br /><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">பூங்காக்களில்</span><br /><span style="color:#339999;">காதலைச் சொல்லலாம் தான்...</span><br /><br /><span style="color:#339999;">ஆனால்</span><br /><span style="color:#339999;">பூங்காவிடமே எப்படி??</span><br /><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">உன்னால் சாமிகளுக்குள் சண்டை...</span><br /><br /><span style="color:#339999;">நீ மார்போடு அணைத்து வரும்</span><br /><span style="color:#339999;">பரீட்சை அட்டையில்</span><br /><span style="color:#339999;">யார் இடம் பிடிப்பது என்று...</span><br /><br /><span style="color:#339999;">***********************************</span><br /><br /><span style="color:#339999;">தூங்கும் குழந்தை சிரித்தால்</span><br /><span style="color:#339999;">கனவில் கடவுள் வந்ததாக சொல்கிறார்களே</span><br /><br /><span style="color:#339999;">நான் தூக்கத்தில் கண்ணடிக்கிறேனாம்</span><br /><span style="color:#339999;">நீ தானே வந்தது...??</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">சாப்பிடும் போது நீ</span><br /><span style="color:#339999;">சாமிக்கு என்று சொல்லி </span><br /><span style="color:#339999;">தனியே எடுத்துவைக்கிறாய்...</span><br /><br /><span style="color:#339999;">நானோ </span><br /><span style="color:#339999;">உனக்கு என்று சொல்லி</span><br /><span style="color:#339999;">வாயில் போட்டுக்கொள்கிறேன்...</span><br /><br /><span style="color:#339999;">நீ இருப்பது என்னுள் தானே...</span><br /><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">கனவுகளில் மிரட்டிவிட்டுப் போகின்றன</span><br /><span style="color:#339999;">தேவதைகள்...</span><br /><br /><span style="color:#339999;">எங்கள் வீட்டுப் பெண்ணை</span><br /><span style="color:#339999;">எப்படி நீ காதலிக்கலாம் என்று...</span><br /><br /><span style="color:#339999;">************************************ </span><br /><span style="color:#339999;"><br />சூரியனுக்கு தமிழன்</span><br /><span style="color:#339999;">பொங்கல் வைக்கிறான்..</span><br /><span style="color:#339999;"><br />நீயோ<br />தமிழனையே<br />பொங்க வைக்கிறாய்...</span><span style="color:#339999;">....<br /><br />**********************************<br /><br /><br /></span></span><span style="color:#339999;"></span><span style="color:#339999;"></span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-88140344398024090402008-01-23T19:18:00.000-08:002008-01-24T01:23:32.463-08:00தலையணை விடு தூது...<span style="font-family:lucida grande;color:#339999;">உன்னிடம் தூது செல்ல<br />என் காதலை<br />முழுதுமாய் அறிந்தவர்<br />யாருமில்லை<br /><br />என் தலையணையைத் தவிர......<br /><br />***************************************<br /><br />உன் கொலுசு<br />மணி ஒலிக்கும் போதெல்லாம்<br /><br />கண்களுக்குள்<br />கற்பூரம் ஏற்றுகிறது<br />காதல்....<br /><br />***************************************<br /><br />நீ வரும் வரையில்<br />பொறுப்பதேயில்லை...<br /><br />நான் மட்டுமல்ல<br />என் கவிதையும் தான்...<br /><br />*************************************<br /><br />நட்சத்திரங்களைப் பூக்கிறது<br />மொட்டைமாடி ரோஜாச்செடி....<br /><br />அருகில் சென்று<br />கூந்தல் உலர்த்தினாயா?<br /></span><p></p><p><span style="font-family:lucida grande;color:#339999;"></span></p><p><span style="font-family:lucida grande;color:#339999;"></span></p><p><span style="font-family:lucida grande;color:#339999;"></span></p><span style="font-family:lucida grande;color:#339999;">************************************<br /><br />ஆயிரம் முறை<br />சொல்லிவிட்டாய்<br />"அப்புறம்" என்று....<br /><br />ஒரே ஒரு முறை சொல்<br />உன் காதலை...<br /><br />************************************<br /><br />பூக்களைப் பறித்தால்<br />வலிக்கும் என்கிறது<br /><br />ஆனால்<br />மரத்தில் பெயரைச்<br />செதுக்கிவைக்கிறது....<br /><br />என்ன காதலோ???<br /><br />***********************************<br /><br />உங்களுக்கு மிகவும் பிடித்த<br />கவிஞர் யார்? என்கிறாய்...<br /><br />யாராய் இருக்க முடியும்<br />இத்தனை அழகாய் உன்னை எழுதிய<br />உன் அம்மாவைத் தவிர.....<br /><br />*************************************<br /><br />தெய்வத்தைப் பார்த்தால் அல்ல<br />தேவதையைப் பார்த்தாலும்<br />அருள் வரும் என்று<br />தெரிந்து கொண்டேன்...<br /><br />நீ என்னைக் கடந்து போன போது.........<br /><br />***************************************<br /><br />படிக்கப்படாமலேயே இருக்கின்றன<br /><br />நீ எனக்களித்த முதல் புத்தகமும்<br />நான் உனக்கெழுதிய முதல் கடிதமும்....<br /><br />****************************************<br /><br />உன் துப்பட்டா<br />என் மேல்<br />எங்கு மோதினாலும்<br /><br />வீங்குவதென்னவோ<br />என் இதயம் தான்......<br /><br />***************************************<br /><br />உன்னை விட்டுவிட்டு<br />சாப்பிட்டால்<br />எனக்கு வயிறுவலிக்கும்<br />என்கிறாயே....<br /><br />என்னை விட்டுவிட்டு<br />இருக்கிறாயே<br />உனக்கு இதயமே வலிக்காதா??<br /><br />***************************************<br /><br />நீ பூப்பந்து ஆடும்போதெல்லாம்<br />பயமாய் இருக்கிறது எனக்கு<br /><br />எல்லைக் கோட்டைத் தாண்டி<br />விழுந்துவிடுமோ<br />என் மனசு என்று.....<br /><br />***************************************</span><span style="font-family:lucida grande;color:#339999;"><br /></span></span>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-26342135251705613282008-01-22T21:41:00.000-08:002008-01-22T22:40:13.057-08:00மருதாணிச்செடியில் பூத்த மல்லிகை<span style="color:#339999;">உன்னைப் பார்த்து</span><br /><span style="color:#339999;">தெரிந்துகொண்டது</span><br /><span style="color:#339999;">இந்த உலகம்.....</span><br /><br /><span style="color:#339999;">மருதாணிச் செடியிலும்</span><br /><span style="color:#339999;">மல்லிகைப்பூ பூக்கும் என்று....</span><br /><br /><span style="color:#339999;">************************************</span><br /><br /><span style="color:#339999;">பாதரசத்தில் கரையாத</span><br /><span style="color:#339999;">தங்கமும் கூட இருக்கிறது</span><br /><br /><span style="color:#339999;">உன்</span><br /><span style="color:#339999;">பாதக் கொலுசுகளில்....</span><br /><br /><span style="color:#339999;">************************************</span><br /><br /><span style="color:#339999;">காற்றில் படபடக்கும்</span><br /><span style="color:#339999;">உன் சிவப்புத் துப்பட்டா</span><br /><span style="color:#339999;">அறிவிக்கிறது.....</span><br /><br /><span style="color:#339999;">காதல்</span><br /><span style="color:#339999;">மையம் கொள்ளப் போகிறது</span><br /><span style="color:#339999;">என்று....</span><br /><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">இரவில் வெளியே செல்ல</span><br /><br /><span style="color:#339999;">உனக்கு அச்சமாக இருக்கிறது</span><br /><span style="color:#339999;">இரவுக்கு ஆசையாக இருக்கிறது</span><br /><span style="color:#339999;">நிலாவுக்கோ பொறாமையாக இருக்கிறது....</span><br /><br /><span style="color:#339999;">*********************************</span><br /><br /><span style="color:#339999;">உன்னிடம் தோற்றுப் போகிற</span><br /><span style="color:#339999;">ஆட்டங்களிலும்</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">தாயக்கட்டை</span><br /><span style="color:#339999;">எனக்கு</span><br /><span style="color:#339999;">ஆதாயக்கட்டை தான்......</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">நீ</span><br /><span style="color:#339999;">குளித்துவிட்டுப் போயிருக்கிறாய்...</span><br /><br /><span style="color:#339999;">இல்லை</span><br /><span style="color:#339999;">ஒரு ஆற்றை திருவையாறாக</span><br /><span style="color:#339999;">மாற்றிவிட்டு போகிறாய்........</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">நான்</span><br /><span style="color:#339999;">யாரைக் காதலிக்கிறேன்</span><br /><span style="color:#339999;">எனக் கேட்டார்கள்...</span><br /><br /><span style="color:#339999;">கவிதையை என்றேன்..</span><br /><br /><span style="color:#339999;">உனக்கு தெரியுமே</span><br /><span style="color:#339999;">எனக்கு</span><br /><span style="color:#339999;">பொய் சொல்லவே வராது என்று....</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">ஒரு கல்லூரியே</span><br /><span style="color:#339999;">காதல் தேர்வு</span><br /><span style="color:#339999;">எழுதிக்கொண்டிருக்கிறது....</span><br /><br /><span style="color:#339999;">எல்லாம்</span><br /><span style="color:#339999;">"மதி"ப்பெண்ணுக்காகத் தான்...</span><br /><br /><span style="color:#339999;">***********************************</span><br /><br /><span style="color:#339999;">கொடியில் காய்கிற</span><br /><span style="color:#339999;">உன் ஆடைகளை</span><br /><span style="color:#339999;">களவாடுகிறதே...</span><br /><br /><span style="color:#339999;">இது தான்</span><br /><span style="color:#339999;">பருவக் காற்றா???</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">காதலைச் சொல்ல வெட்கப்பட்டு</span><br /><span style="color:#339999;">உன் கால்விரலால் நீ</span><br /><span style="color:#339999;">கோலமிட்ட இடத்தில்</span><br /><span style="color:#339999;">முளைத்திருக்கிறது</span><br /><br /><span style="color:#339999;">ஒரு அழகிய</span><br /><span style="color:#339999;">மருதாணிச் செடி....</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">குளிக்கும் போது</span><br /><span style="color:#339999;">நீ கொலுசுகளைக் கழற்றுகிறாய்<br />நதி மாட்டிக்கொள்ளுகிறது....</span><br /><br /><span style="color:#339999;">********************************<br /> </span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-42422696354034287232008-01-07T19:07:00.000-08:002008-01-07T21:36:21.593-08:00வலைகள் வைத்திருக்கும் அலைகள்<span style="color:#339999;">"முரண்பாடு" என்றால் என்ன?</span><br /><span style="color:#339999;">என்றாய்</span><br /><span style="color:#339999;">என் கழுத்தைக் கட்டிக் கொண்டு...</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">"என்னை உப்பு மூட்டை தூக்கு"</span><br /><span style="color:#339999;">என்று</span><br /><span style="color:#339999;">ஒரு சர்க்கரை மூட்டை கேட்கிறதே</span><br /><span style="color:#339999;">இது தான் என்றேன்...</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">*******************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">கையில் வைத்திருந்த குடையை</span><br /><span style="color:#339999;">காற்றில் ஆட்டி விளையாடிக்கொண்டிருந்தாய்....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">குடைக்குள் இருந்து கத்தியது</span><br /><span style="color:#339999;">என் மனசு<br />"மெதுவா.. மெதுவா..</span><br /><span style="color:#339999;">குடைராட்டினம் என்றால்</span><br /><span style="color:#339999;">எனக்கு பயம்.."</span><br /><span style="color:#339999;">என்று....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">*******************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">நீ இன்னும் மாறவேயில்லை...</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">எதையாவதுகொண்டு வந்து தருவாய்</span><br /><span style="color:#339999;">பிறகு திருப்பி கொடு என்பாய்... </span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">சின்ன வயதில் மாங்காய்த் துண்டு</span><br /><span style="color:#339999;">இப்பொழுதோ உன் மனசு.. </span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">ஒரு மாறுதலுக்காக</span><br /><span style="color:#339999;">நீ கொடுத்த</span><br /><span style="color:#339999;">முத்தங்களை எல்லாம் கேள்</span><br /><span style="color:#339999;">திருப்பி கொடுத்துவிடுகிறேன்....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">**************************************</span><br /><br /><span style="color:#339999;">உன் மனதை</span><br /><span style="color:#339999;">என்னோடு ஒட்ட வைக்கச்சொன்னால்</span><br /><br /><span style="color:#339999;">நீயோ</span><br /><span style="color:#339999;">உன் முகத்தை</span><br /><span style="color:#339999;">ஊரில் எல்லாருக்கும்</span><br /><span style="color:#339999;">ஒட்டிவைத்துவிட்டு போயிருக்கிறாய்....</span><br /><br /><span style="color:#339999;">*************************************</span><br /><br /><span style="color:#339999;">காதல்</span><br /><span style="color:#339999;">ஒரு பொல்லாத கடல்...</span><br /><br /><span style="color:#339999;">இங்கே</span><br /><span style="color:#339999;">அலைகள் ஒவ்வொன்றுமே</span><br /><span style="color:#339999;">வலைகள் தைத்து வைத்திருக்கின்றன....</span><br /><br /><span style="color:#339999;">************************************</span><br /><br /><span style="color:#339999;">மோதிரங்களுக்காகவே படைக்கப்பட்ட</span><br /><span style="color:#339999;">நான்காவது விரல் மாதிரி</span><br /><br /><span style="color:#339999;">உன் மாலைகளுக்காகவே</span><br /><span style="color:#339999;">படைக்கப்பட்டது</span><br /><span style="color:#339999;">என் கழுத்து.......</span><br /><br /><span style="color:#339999;">************************************</span><br /><br /><span style="color:#339999;">உன் பார்வைகள்</span><br /><span style="color:#339999;">துருவியதும்</span><br /><span style="color:#339999;">குளிர்ந்து உறைந்து விடுகிறதே</span><br /><span style="color:#339999;">என் இதயம்....</span><br /><br /><span style="color:#339999;">இதற்கு பெயர் தான்</span><br /><span style="color:#339999;">துருவப் பிரதேசமோ?</span><br /><br /><span style="color:#339999;">***********************************</span><br /><br /><span style="color:#339999;">என் கனவுகளில்</span><br /><span style="color:#339999;">நீ வருவதற்காக</span><br /><span style="color:#339999;">உன் கால்களில் கட்டிக்கொண்ட</span><br /><span style="color:#339999;">கடிகாரத்தைத் தான்</span><br /><br /><span style="color:#339999;">"கொலுசு" என்று பெயர் வைத்து</span><br /><span style="color:#339999;">அழைக்கிறது</span><br /><span style="color:#339999;">இந்த புரியாத உலகம்.....</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">"கடவுள் வந்தால்</span><br /><span style="color:#339999;">என்ன வரம் கேட்பீர்கள்?" என்றாய்...</span><br /><br /><span style="color:#339999;">"பெரிய மனசு" என்றேன் நான்..</span><br /><br /><span style="color:#339999;">தானதருமம் செய்யவா என்றாய்</span><br /><span style="color:#339999;">புரியாதவளாய்...</span><br /><br /><span style="color:#339999;">உன் சிணுங்கல்,புன்னகை,கோபம்</span><br /><span style="color:#339999;">என்று</span><br /><span style="color:#339999;">நீ தந்து கொண்டேயிருக்கும்</span><br /><span style="color:#339999;">உன் பரிசுகளை</span><br /><span style="color:#339999;">நான் வேறு எங்கு வைப்பேன்....</span><br /><br /><span style="color:#339999;">******************************</span><br /><br /><span style="color:#339999;">உன் ஒருத்தியின்</span><br /><span style="color:#339999;">ஊரில் மட்டும் தான்..</span><br /><br /><span style="color:#339999;">மலர்ச்செடிகளும்</span><br /><span style="color:#339999;">கைகளில்</span><br /><span style="color:#339999;">மாலைகளோடு காத்திருக்கின்றன...</span><br /><br /><span style="color:#339999;">*********************************<br /></span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-7424617389959558662008-01-04T03:31:00.000-08:002008-01-04T03:41:17.835-08:00எது சொன்னால் விழுவேன்...<span style="color:#339999;">நீ "சரி" என்று சொல்</span><br /><span style="color:#339999;">நான் சரிந்து விழுவேன்....</span><br /><br /><span style="color:#339999;">நீ "தவறு" என்று சொல்</span><br /><span style="color:#339999;">நான் தவறி விழுவேன்...</span><br /><br /><span style="color:#339999;">நான்</span><br /><span style="color:#339999;">"எது சொன்னாலும் விழுவாயா??"</span><br /><span style="color:#339999;">என்கிறாய்...</span><br /><br /><span style="color:#339999;">நீ எதுவும் சொல்லாமலேயே</span><br /><span style="color:#339999;">விழுந்துவிட்டேனே</span><br /><span style="color:#339999;">உன் மேல் காதலில்....</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">நேற்று என் கனவில்</span><br /><span style="color:#339999;">நீ மழையில்</span><br /><span style="color:#339999;">நனையக் கண்டதும்...</span><br /><br /><span style="color:#339999;">ஓடோடிச்சென்று</span><br /><span style="color:#339999;">குடை பிடித்திருக்கிறேன்...</span><br /><br /><span style="color:#339999;">என் வீட்டு</span><br /><span style="color:#339999;">ரோஜாச்செடிக்கு.....</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><br /><span style="color:#339999;">இரவில்</span><br /><span style="color:#339999;">கொசுவலை கட்டிக் கொண்டு </span><br /><span style="color:#339999;">உறங்கு என்றாள் அம்மா....</span><br /><br /><span style="color:#339999;">நானோ</span><br /><span style="color:#339999;">உன் நினைவுகளையும்</span><br /><span style="color:#339999;">தலையணையையும்</span><br /><span style="color:#339999;">கட்டிக் கொண்டு உறங்குகிறேன்...</span><br /><br /><span style="color:#339999;">************************************</span><br /><br /><span style="color:#339999;">உலக உருண்டை</span><br /><span style="color:#339999;">இன்னது என்று</span><br /><span style="color:#339999;">தெரிந்துகொண்டேன்...</span><br /><br /><span style="color:#339999;">உனக்கே தெரியாமல்</span><br /><span style="color:#339999;">உன் ஜாமெட்ரி பாக்ஸிலிருந்து</span><br /><span style="color:#339999;">நான் திருடிய</span><br /><span style="color:#339999;">நெல்லிக்காயில்....</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">"எதாவது பேசுங்க" என்று </span><br /><span style="color:#339999;">நீ சொன்னதும்</span><br /><br /><span style="color:#339999;">என்ன கேட்பது என்று தெரியாமல்</span><br /><span style="color:#339999;">வழிகேட்டிருக்கிறேன்..</span><br /><br /><span style="color:#339999;">நான் கையிலேயே</span><br /><span style="color:#339999;">வைத்திருந்த</span><br /><span style="color:#339999;">என் வீட்டு முகவரிக்கு.....</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">கண்ணாடி முன் சோம்பல் முறிக்காதே....</span><br /><br /><span style="color:#339999;">உன் அழகில் மயங்கி</span><br /><span style="color:#339999;">நிலைக்கண்ணாடி கூட</span><br /><span style="color:#339999;">நிலை குலைந்த கண்ணாடி</span><br /><span style="color:#339999;">ஆகி விடுகிறது.....</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">உன்னைப் பார்த்ததும் </span><br /><span style="color:#339999;">விளங்கிக் கொண்டேன்..</span><br /><br /><span style="color:#339999;">நேரான உன் தெருமுனையில்</span><br /><span style="color:#339999;">இருக்கும்</span><br /><span style="color:#339999;">"எச்சரிக்கை அபாய வளைவுகள்"</span><br /><span style="color:#339999;">என்ற பலகையின் காரணத்தை....</span><br /><br /><span style="color:#339999;">*******************************</span><br /><br /><span style="color:#339999;">உடைபடுவோம் என்று</span><br /><span style="color:#339999;">தெரிந்தே காத்திருக்கும்</span><br /><span style="color:#339999;">பிளாஸ்டிக் பை நான்....</span><br /><br /><span style="color:#339999;">நீயே வந்து</span><br /><span style="color:#339999;">நன்றாக ஊதி</span><br /><span style="color:#339999;">உடைத்துவிட்டுச் செல்....</span><br /><br /><span style="color:#339999;">********************************</span><br /><br /><span style="color:#339999;">இரவில் கொசுத்தொல்லை</span><br /><span style="color:#339999;">அதிகமா என்றார்கள் என்னிடம்...</span><br /><br /><span style="color:#339999;">இல்லை தேனீக்கள் தொல்லை</span><br /><span style="color:#339999;">என்றேன்...</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">நீ என் </span><br /><span style="color:#339999;">கனவில் வருவது கூட</span><br /><span style="color:#339999;">தேனீக்களுக்கு தெரிந்துவிடுகிறது.....</span><br /><br /><span style="color:#339999;">***********************************<br /> </span>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-8829062744024346762007-12-19T20:41:00.000-08:002007-12-24T02:47:26.124-08:00கண்ணெழுத்துக்களின் பிம்பம்<span style="color:#339999;">***********************<br />என் இதயத்தில்<br />நீ போட்ட<br />கண்ணெழுத்துக்களின்<br />பிம்பத்தைத் தான்<br />கவிதை என்கிறது<br />இந்த உலகம்....<br /><br />*************************<br /><br />ஒவ்வொரு முறையும்<br />என் உறக்கத்தில் மட்டும்<br />வந்து போகிறாயே.....<br /><br />காதல் கண்மூடித்தனமானது<br />என்பது இது தானா??<br /><br />**************************<br /><br />தண்டவாளக் கம்பிகள்<br />நாம்....<br /><br />நம் ஒவ்வொரு இணைவும்<br />பிரிவுக்காக....<br /><br />நம் ஒவ்வொரு பிரிவும்<br />இணைவிற்காகவே....<br /><br />**************************<br /><br />உன் பார்வையில் இருந்து<br />தப்ப முடியாமல்<br />சரணடைகிறேன்...<br /><br />நீயே வந்து என்னை<br />கைது செய்து போ....<br /><br />கையோடு கொண்டு வந்திருக்கிறேன்<br />காதல் விலங்கு....<br /><br />****************************<br /><br />காதல் தெய்வீகமானது....<br /><br />ஆம்<br />அதனால் தான்<br />பாறாங்கல்லில் கூட<br />கடவுளைப் பார்க்க முடிகிறது...<br /><br />*****************************<br />நீ<br />மஞ்சள் தாவணி உடுத்தும்<br />நாட்களில் எல்லாம்<br />வெள்ளை ரோஜாக்களுக்கும்<br />மஞ்சள் காமாலை தான்....<br /><br />****************************<br /><br />இருட்டைத் தொலைத்த<br />ஒவ்வொரு விளக்கும் சொன்னது<br />நீ முத்தமிட்ட கதையை....<br /><br />இறக்கை தொலைத்த<br />ஒவ்வொரு விட்டிலும் சொன்னது<br />உன்னை முத்தமிட்ட கதையை....<br /><br />****************************<br /><br />உன் மனதில் நான்<br />இல்லை என்பதற்காக<br />நீ அனுப்பிய<br />வெற்றுக் காகிதத்தைக்கூட....<br /><br />உன் மனசு<br />வெள்ளை என்றே புரிந்துகொள்கிறது<br />உன் மேலான<br />என் காதல்......<br /><br />*********************************<br />உன் கூந்தலில் இருந்து<br />உதிரும் வரையிலான<br />காலத்தை....<br /><br />கோலாகலமாக கொண்டாடுகின்றன<br />பூக்கள்...<br />'விழாக்'காலம் என்று...<br /><br />************************************</span>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-36553669340839166482007-12-04T21:24:00.000-08:002007-12-20T21:15:12.295-08:00மகரந்தப் பூக்கள்....<span style="color:#339999;">உன் தெருவின்</span><br /><span style="color:#339999;">அத்தனை வீட்டு வாசலிலும்</span><br /><span style="color:#339999;">பூக்கோலம்...</span><br /><br /><span style="color:#339999;">உன்</span><br /><span style="color:#339999;">ஒருத்தியின் வீட்டில்</span><br /><span style="color:#339999;">மட்டும் தான்</span><br /><span style="color:#339999;">பூவே வரைந்த கோலம்...</span><br /><br /><span style="color:#339999;">**********************************</span><br /><span style="color:#339999;">உனது வீட்டை</span><br /><span style="color:#339999;">அடையாளம் கண்டுபிடிப்பது</span><br /><span style="color:#339999;">ரொம்பவே சுலபம்...</span><br /><br /><span style="color:#339999;">தபால்காரன் கூட</span><br /><span style="color:#339999;">இதயத்தை மட்டுமே தந்துவிட்டுப் போகிறானே</span><br /><span style="color:#339999;">இது தானே </span><br /><span style="color:#339999;">உன் வீடு....</span><br /><br /><span style="color:#339999;">******************************************</span><br /><span style="color:#339999;">எப்போதாவது</span><br /><span style="color:#339999;">பொட்டுவைக்க மறந்து</span><br /><span style="color:#339999;">நீ கல்லூரிக்கு வரும் நாட்கள்</span><br /><span style="color:#339999;">அறிமுகம் செய்துவைத்தன</span><br /><span style="color:#339999;">எங்களுக்கு......</span><br /><br /><span style="color:#339999;">அமாவாசையையும்</span><br /><span style="color:#339999;">பௌர்ணமியையும்....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">*****************************************</span><br /><span style="color:#339999;">உனக்கே தெரியாமல்</span><br /><span style="color:#339999;">உன் நோட்டுப்புத்தகத்தை</span><br /><span style="color:#339999;">திருடியிருக்கிறேன்......</span><br /><br /><span style="color:#339999;">நாங்கள் எல்லாம்</span><br /><span style="color:#339999;">நோட்டுப்புத்தகத்தில்</span><br /><span style="color:#339999;">மயிலிறகு வளர்க்கும்போது</span><br /><br /><span style="color:#339999;">ஒரு மயில்</span><br /><span style="color:#339999;">தன் பாடப்புத்தகத்தில்</span><br /><span style="color:#339999;">எதை வளர்க்கிறது</span><br /><span style="color:#339999;">எனத் தெரிந்துகொள்ளும்</span><br /><span style="color:#339999;">ஆவலில்.......</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">*****************************************<br />எந்த வடிவத்தில் கும்பிட்டாலும்</span><br /><span style="color:#339999;">சாமி சாமியே தான்...</span><br /><br /><span style="color:#339999;">எந்த உடையில் நீ வந்தாலும்</span><br /><span style="color:#339999;">அழகு அழகே தான்....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">***************************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">சீக்கிறம் ஏறு...</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">உன் வருகைக்காக</span><br /><span style="color:#339999;">காத்திருந்து காத்திருந்து....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">"நகராப்" பேருந்து ஆகிவிட்டது</span><br /><span style="color:#339999;">நகரப் பேருந்து...</span><br /><br /><span style="color:#339999;">******************************************</span><br /><span style="color:#339999;">திருக்குறளை விட</span><br /><span style="color:#339999;">மிகச் சிறிய கவிதையை </span><br /><span style="color:#339999;">சொல்ல வேண்டும் என்றார்</span><br /><span style="color:#339999;">தமிழாசிரியர்...</span><br /><br /><span style="color:#339999;">மனசுக்குள்</span><br /><span style="color:#339999;">சொல்லிப்பார்த்துக் கொண்டேன்</span><br /><span style="color:#339999;">உன் பெயரை.....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">*************************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">என்னோடு </span><br /><span style="color:#339999;">சண்டையிட்டுக்கொண்டு</span><br /><span style="color:#339999;">நீ பேசாத நாட்களில்</span><br /><span style="color:#339999;">உணர்ந்தேன்....</span><br /><br /><span style="color:#339999;">உலகின்</span><br /><span style="color:#339999;">மிகக் கொடிய நோய்</span><br /><span style="color:#339999;">சர்க்கரைவியாதி என்று....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">************************************* </span><br /><span style="color:#339999;">அம்மையப்பனை</span><br /><span style="color:#339999;">மூன்று முறை சுற்றி</span><br /><span style="color:#339999;">வந்ததும்</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">கனி கிடைத்துவிட்டது</span><br /><span style="color:#339999;">விநாயகருக்கு....</span><br /><br /><span style="color:#339999;">உன்னையே</span><br /><span style="color:#339999;">எத்தனை முறை சுற்றினாலும்</span><br /><span style="color:#339999;">கனிவதேயில்லை</span><br /><span style="color:#339999;">உன் மனசு...</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">********************************</span><br /><span style="color:#339999;">எட்டாத தொலைவில் இருந்தாலும்</span><br /><span style="color:#339999;">சூரியனை தரிசிக்கிர</span><br /><span style="color:#339999;">உலகத்தைப் போல</span><br /><br /><span style="color:#339999;">எட்ட இருந்தே</span><br /><span style="color:#339999;">உன்னை ஸ்பரிசிக்க முடியும்</span><br /><span style="color:#339999;">என்னால்.....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">********************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">எந்தக் கனவிலும்</span><br /><span style="color:#339999;">உன் முகம் தெரிவதே இல்லை...</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">இதற்காக தினமும்</span><br /><span style="color:#339999;">கனவு கண்டு தோற்றது தான்</span><br /><span style="color:#339999;">மிச்சம்...</span><br /><br /><span style="color:#339999;">உயிர்த்துடிப்பு மாதிரி</span><br /><span style="color:#339999;">நீ</span><br /><span style="color:#339999;">உயிரை வாங்குகிற துடிப்பு.....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">*******************************<br /></span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-33126996370198747842007-12-01T23:50:00.000-08:002007-12-20T21:15:12.295-08:00நிலாவோடு வாழ்பவன்<span style="color:#339999;">ஒரு மெய்</span><br /><span style="color:#339999;">இரண்டு உயிர்கள்</span><br /><span style="color:#339999;">ஏராளமான ஆயுதங்கள் கொண்ட</span><br /><span style="color:#339999;">அதிசய தமிழ்</span><br /><span style="color:#339999;">நீ</span><br /><br /><span style="color:#339999;">*****************************************************</span><br /><br /><span style="color:#339999;">குத்துகின்ற முட்களை</span><br /><span style="color:#339999;">குற்றம் சொல்லாதே...</span><br /><br /><span style="color:#339999;">உன்னை முத்தமிட</span><br /><span style="color:#339999;">இந்த உலகில்</span><br /><span style="color:#339999;">யாருக்கு தான் ஆசையில்லை...</span><br /><br /><span style="color:#339999;">*****************************************************<br />நிலாவில் வாழமுடியுமா</span><br /><span style="color:#339999;">என்று தெரியவில்லை...</span><br /><br /><span style="color:#339999;">ஆனால்</span><br /><br /><span style="color:#339999;">நிலாவோடு வாழமுடியும்</span><br /><span style="color:#339999;">என்று தெரிந்துகொண்டேன்</span><br /><span style="color:#339999;">உன்னைப் பார்த்து...</span><br /><br /><span style="color:#339999;">****************************************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">பக்கம் பக்கமாய்</span><br /><span style="color:#339999;">கவிதை எழுதுகின்றன</span><br /><span style="color:#339999;">கைகள்....</span><br /><br /><span style="color:#339999;">ஒற்றை வார்த்தையை மட்டும்</span><br /><span style="color:#339999;">ஓயாமல் உச்சரிக்கின்றது</span><br /><span style="color:#339999;">மனசு.....</span><br /><br /><span style="color:#339999;">"நீ".....<br />***************************************************</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">வெட்கமே உனக்கு</span><br /><span style="color:#339999;">முகமூடி தானே...</span><br /><br /><span style="color:#339999;">பிறகு ஏன்</span><br /><span style="color:#339999;">வெட்கப்பட்டு</span><br /><span style="color:#339999;">கைகளால் வேறு மூடுகிறாய்...</span><br /><br /><span style="color:#339999;">***************************************************<br />வண்ணத்துப் பூச்சி</span><br /><span style="color:#339999;">மகரந்தங்களை சேகரிக்கும்...</span><br /><br /><span style="color:#339999;">ஆனால்</span><br /><span style="color:#339999;">புன்னகை மகரந்தங்களையே</span><br /><span style="color:#339999;">உற்பத்தி செய்யும்</span><br /><span style="color:#339999;">அதிசய வண்ணத்துப்பூச்சி</span><br /><span style="color:#339999;">நீ</span><br /><span style="color:#339999;"></span><br />****************************************************Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-59003734369748668652007-11-23T04:25:00.000-08:002007-12-20T21:13:54.520-08:00தரை மேல் பிறப்போம்.. தண்ணீரில் மிதப்போம்...இவர்களை இந்நாட்டின் எந்த மூலையிலும், எந்த வேளையிலும் பார்க்கமுடியும்... நட்ட நடு ரோட்டில் நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் இவர்கள் ஒன்றும் சினிமா கதாநாயகர்கள் அல்லர்... சாலை ஓரத்தில், விளக்குக் கம்பத்தின் அடியில் தலை கீழாகவும் கால் மேலாகவும் சிரசாசனக் கோலத்தில் கிடப்பார்கள்..ஆனால் இவர்கள் ஆசனங்களைக் கரைத்துக் குடித்த யோகிகள் அல்லர்... யாருமே இல்லாத இடத்தில் கூட தோளைச் சுற்றியிருக்கும் துண்டை இரு கைகளிலும் இறுகப் பற்றியபடி " நான் சொல்றேன்.. நம்மூர்ல அடுத்த பிரசிரண்டு தேர்தல்ல நீ தான் எம்.பி" என்று அரசியல் முழக்கம் இடுவார்கள்... இத்தகைய செயற்கரிய செயல்களை எல்லாம் செய்யும் இவர்கள் யார்?????... அங்கிங்கெனாதபடி இந்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கூட நிரைந்துவிட்ட "குடி"மக்கள் தான் அவர்கள்....<br /><br />சின்ன வயது தொட்டே இவர்களது அழிம்புகளும். அட்டூழியங்களும் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டிருந்ததால் அவற்றை எல்லாம் எடுத்துச் சொல்வதில் எந்தச் சிரமமும் இல்லை... ஊரின் எல்லையில் இருக்கும் பனங்கரை தான் இந்த புத்தர்களின் போதி மரம்... அந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் கூட கிராமத்தின் "பால் குடி" மறவாத மக்களை ஒட்டுமொத்தமாக அங்கே காண முடியும்...<br /><br />"குடியும் கூத்தும் " என்ற வழக்கு ஒன்றும் அறியாதவர்கள் சொல்லிவைத்தது அல்ல.. குடி முதலில் குடலுக்குள் அரங்கேறும்.. பிறகு அவர்கள் நிகழ்த்துகிற கூத்துக்கள் ஊருக்குள் அரங்கேறும்... நான் தொடக்கத்தில் சொன்ன கூத்துக்கள் அத்தனையும் இந்த கூத்தபிரான்கள் நிகழ்த்தியவைகள் தாம்..<br /><br />குயிலுக்கு கூட தொண்டை கட்டிக் கொள்ளுகிற அதிகாலையில் "பால்" உள்ளே போனதும் "பாட்டு" பிரமாதமாக வெளியேவரும்... "ஓடுகிற வண்டி ஓட..ஒத்துமையா ரெண்டு மாடு" என்று எக்கச்சக்கமான "சுதி"யில் பாட ஆரம்பித்து ஊருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சொச்சமிச்ச மக்களையும் எழுப்பி உட்கார வைக்கும் சேவல்கள் இவர்கள்...இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பாடலின் நடுவே "ஆண்டவனக் காதலிச்சா பாண்டி நாட்டு மீனாச்சி..." என்ற அடியை மட்டும் ஐம்பது முறையாவது பாடி..அந்த ஆண்டவனே வந்து அடுத்த அடிக்குப் போக உத்தரவு கொடுத்தால் தான் போவார்....<br /><br />பல வருடங்களாக சாராயத்தைக் குடித்துக் குடித்துப் பழகிப் போன பெருசுகளில்.. புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வெறியில்..."பழைய சோற்றையும், பட்டைச் சாராயத்தையும் கலந்து, அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றையும் அள்ளிப் போட்டு புதிய "காக்டெயிலை" கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் கலக்கி அடித்த "விஞ்ஞானிகளும் " இங்கே உண்டு...இட்லியையும், பீரையும் கலந்த ஆறுச்சாமிக்கெல்லாம் அப்பன், தாத்தன்கள் இவர்கள்...<br /><br />பொதுவாக பனங்கரையும், சாராயக் கடைகளும் "மூத்தகுடி" மக்களின் இடங்களாகக் கருதப்பட்டன... இளசுகள் பெரும்பாலும் புட்டிகளில் அடைக்கப் பட்ட மதுவகைகளைத் தான் விரும்பும்..<br /><br />பனங்கரை பெருசுகளின் போதிமரம் என்றால்..புளியந்தோப்பு இளசுகளின் பாசறை...அதிலும் தீபாவளி, பொங்கல் என்று எதாவது விசேசங்கள் ஊருக்குள் வந்தால் போதும்.. இவர்களின் அலப்பறைகளும், அட்டகாசங்களும் சொல்லில் அடங்காது...<br /><br />ஆயிரம் இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் அவர்களை இந்நாட்டின் மன்னர்கள் ஆக்கிக் காட்டுகிறேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் ஒரு செய்தி.. அவர்கள் அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு பாட்டிலைக் கைகளில் கொடுங்கள்..எத்தனையோ இயக்குநர்கள் கதறியும் வராத உணர்ச்சிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக உண்டியல் திறந்து கொட்டுவார்கள்.... அதுவரை ஊருக்குள் யாரைக் கண்டாலும் வேட்டியை தரைதடவுகிற அளவுக்கு இறக்கிவிடுகிற ஆள்..மப்பு மண்டைக்கு ஏறியதும்... இருந்த வேட்டியை மொத்தமாக அவிழ்த்து தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு "கந்தன் கருணை" சிவாஜியைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு "வெற்றிவேல்.. வீரவேல்.." என்று குறுக்கும் நெடுக்குமாய் டங்.. டங்..கென்று வீரநடை பழக ஆரம்பித்துவிடுவான்...<br /><br /> இதற்கு நேர்மாறாக கால்களைத் தரையில் வைக்காமலே சைக்கிளில் எட்டு, ஒன்பது என்று ஊரின் அத்த்னைச் சந்துகளிலும் படம் வரைந்தவன் ஒரு கோப்பை உள்ளே போனதும் அடித்துச் சாய்த்து கட்டுக் கட்டிய பிணம் போலக் கிடப்பான்... இவர்கள் எல்லாரும் மகிழ்ச்சிக்காகக் குடிப்பவர்கள்... சோகத்துக்காக குடிப்பவர்களின் கதைகளும், குடித்தபிறகு அவர்கள் படுத்துகிற பாடுகளும் இன்னும் வேடிக்கையானவை...<br /><br />பெரும்பாலும் சோகத்துக்காக குடிப்பவர்கள் காதல் தோல்வியாளர்கள் தாம்...மாதுவின் மீதான காதலுக்கு கால் உடைந்தால் மதுவின் மீது காதல் தானாக வரும் என்ற சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.. ஒரு நாள் தீபாவளிப் "பூசையில்" மொக்கையன் நிகழ்த்திய கூத்துக்கள் இன்றளவும் ஊருக்குள் குடிகாரர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுகிற ஒன்று... பக்கத்து ஊர் பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதி அது தோல்வியில் முடிய..தீபாவளிப் பூசையில் முட்டமுட்டக் குடித்து அதைத் தீர்த்துக் கொள்வது என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவோடு பூசைக்கு வந்தான் மொக்கையன்...<br /><br />இரண்டு, மூன்று ரவுண்டுகள் வரை இருந்த நிதானம் சரக்கு எக்கச்சக்கமாகிப் போனதும் பிசகி... பக்கத்தில் உட்கார்ந்திருந்த தங்கராசு காதலியாய்த் தெரிய... ஆரம்பித்தது அட்டகாசம்.. "குட்டிம்மா..குட்டிம்மா... என்ன உனக்கு புடிக்கலையா?... வா குட்டிம்மா நம்ம ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கலாம்..." என்று உளறியபடி பக்கத்தில் இருந்த தங்கராசுவின் தாடியைத் தடவி அவன் கன்னத்தில் பச்சக், பச்சக் என்று முத்தம் கொடுக்கத்தொடங்கிவிட்டான்...<br /><br />ஏற்கனவே இவனுக்காக கடிதத்தை சுமந்து சென்று..பெண்ணின் அப்பனிடம் செம்மையாக உதை வாங்கி வந்த கடுப்பிலிருந்த தங்கராசு இவனது அட்டகாசத்தால் பொறுமையிழந்து "குட்டிம்மாவாவது...சட்டிம்மாவாவது..உதை வாங்கி வச்சது பத்தாதுன்னு வேகாளத்தையா கெளப்புற.."என்றபடி அவன்மேல் பாய்ந்து குதறத்தொடங்க ஒரே ரகளையில் முடிந்தது தீபாவளி... இதே போல் வேறு ஒரு கூத்து பொங்கலுக்கு காத்திருந்தது...<br /><br />பொதுவாகவே "சபைக்கு" வருகிறவர்கள் பாட்டிலுக்கு பக்க உணவுகள் எதையாவது வாங்கி வருவார்கள்.. நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல "வறுத்த முந்திரி, 65,75" என்று எதுவும் கிடையாது... சாதாரண நாட்கள் என்றால் வேர்க்கடலை,ஊறுகாய், மிச்சர் பொட்டலம், மொந்தன் வாழைப்பழம்..இவற்றல் ஏதாவது இருக்கும்.. சிறப்புப் பூசைகள் என்றால் அன்று வறுத்த முட்டை, வடை, ஆம்லேட் என்று கொஞ்சம் தடபுடலாகவே இருக்கும்... குடிக்கிறவர்களை தவிர இந்த பக்க உணவுகளைத் தின்பதற்காகவே வருகிற கூட்டமும் உண்டு... ஒவ்வொரு முறையும் சரியாக வந்து இந்த சமாச்சாரங்களை எல்லாம் தின்று முடித்துவிட்டு இரவு உணவுக்கான தேவை முடிந்ததும் கம்பியை நீட்டுகிற ஆள் "கோயிந்து"..."கோயிந்துவின் இந்த அடாவடியால் பொறுமை இழந்து தவித்த "குடிமக்கள்" பொங்கல் பூசையில் கோயிந்துவுக்கு பூசை வைக்க காத்திருந்தனர்.. பாவம்..பொறிக்குள் இருக்கிற வடையை நம்பி ஏமார்ந்து போன சுண்டெலியைப் போல ஆனது "கோயிந்து" கதை..<br /><br />"பொங்கல் பூசையில் ராச்சாப்பாட்ட முடிச்சுக்கிரலாம்" என்ற எண்ணத்தோடு காத்திருந்த "கோயிந்துவுக்கு" முன்பே சொல்லிவைத்தது போல் கோலாவில் குவார்ட்டரைக் கலந்து கொடுக்க...லாகிரி தலைக்கேறிப்போய் ஆரம்பமானது அவன் நிகழ்த்திய கூத்து... சாதுவாய் அமர்ந்திருந்தவன் திடீரென்று சன்னதம் கொண்ட சாமியாய் "யே...........ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று சப்தமிட்டபடி எழுந்து, தள்ளாடியபடியே நடந்து சென்று, ஒத்தையடிப்பாதையில் கிடந்த பெரிய கல்லைத்தூக்கி ஆகாயத்தில் எறிய..அது வேலியோரமாய் இயற்கை உபாதைக்காக ஒதுங்கி இருந்த அவனது அப்பாவின் முதுகிலேயே போய் விழ... மூன்று நாட்களுக்கு அவருக்கு வரவேண்டிய உபாதை மட்டுமல்ல..மூச்சே சரியாக வராமல் போய்விட்டது... 'பொங்கலும் அதுவுமா எம் முதுவுல கல்ல உட்டெறிஞ்சவன் எங்கையில கெடச்சான்ணாக்கா..." என்று உறுமியபடியே கட்டிலில் கிடந்தார் அவர்...<br /><br />இப்படி எத்தனையோ கூத்துக்கள் நிகழ்ந்து இருந்தாலும் குடி குடிப்பவனை மட்டும் தான் சந்தோஷப் படுத்துகிறது..அவனது குடும்பத்தார் அதனால் படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை... இவை எல்லாம் விட குடியினால் குடை சாய்ந்த கோபுரங்களைப் பற்றி படித்தபோது என் நெஞ்சு கனத்துப் போனது...<br /><br />ஒரு நாளைக்கு மூன்றே மூன்று வேளை தான் என்று முறைவைத்துக் குடித்த எனது நண்பன் வீட்டுப் பெருசு.. குடல் கொதகொதவென்று வெந்து போய் உணவைக் கூட உட்கொள்ளமுடியாமல் இறந்த சம்பவம் இன்றும் நினைத்தால் நெஞ்சை உலுக்கி எடுக்கிற ஒன்று...<br /><br />குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதிவைப்பதில் எந்தப் புண்ணியமும் இல்லை... குடியை ஒழிக்கிறவரையில் குடிகாரர்களையும் ஒழிக்கமுடியும் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று தான்...<br /><br />வானொலியில் 'தரை மேல் பிறக்கவைத்தான் எங்களைத் தண்ணீரில் மிதக்க வைத்தான்.." என்று மீனவர்களின் சோகத்தை கவிஞரின் பொன்னான வரிகள் பாடுகின்றன... ஆனால் தரையிலும், தண்ணீரிலும், ஆகாயத்திலும் போதையில் மிதப்பவர்களின் குடும்பம் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது... எந்தக் கவிஞன் பாட வரப்போகிறானோ...Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-719451500587072462007-11-18T05:25:00.000-08:002007-12-20T21:15:12.296-08:00கனவுகளில் இருந்து களவாடியவை..<span style="color:#339999;">எப்படி எழுதுகிறேன்</span><br /><span style="color:#339999;">என்கிறாய்</span><br /><br /><span style="color:#339999;">நானெங்கே எழுதுகிறேன்??</span><br /><br /><span style="color:#339999;">இவையெல்லாம்</span><br /><span style="color:#339999;">உன்னோடு</span><br /><span style="color:#339999;">நான் பேசிய</span><br /><span style="color:#339999;">கனவுகளில் இருந்து</span><br /><span style="color:#339999;">களவாடியவை தானே....</span><br /><span style="color:#339999;">*********************************************************</span><br /><br /><span style="color:#339999;">மூன்று நாட்களுக்கு</span><br /><span style="color:#339999;">தேங்காய் உடைத்துவிட்டு</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">முடிந்த பிறகு</span><br /><span style="color:#339999;">தெருவிலே உடைப்பதற்கு</span><br /><br /><span style="color:#339999;">விநாயகர் பொம்மை அல்ல</span><br /><span style="color:#339999;">என் மனசு....</span><br /><br /><span style="color:#339999;">******************************************************<br />உனது கிராமத்து பெட்டிக் கடைகளில்</span><br /><span style="color:#339999;">அதிகம் விற்பனையாவது</span><br /><span style="color:#339999;">சோடா பாட்டில்கள் தான்..</span><br /><br /><span style="color:#339999;">நீ</span><br /><span style="color:#339999;">நடந்து வந்த பாதைகளில்</span><br /><span style="color:#339999;">மயங்கி விழுந்த இதயங்கள் மீது</span><br /><br /><span style="color:#339999;">உடைத்து</span><br /><span style="color:#339999;">தெளித்து</span><br /><span style="color:#339999;">எழுப்பி</span><br /><span style="color:#339999;">உட்காரவைக்க.....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">**********************************************</span><br /><br /><span style="color:#339999;">ஓ மருத்துவர்களே</span><br /><span style="color:#339999;">இதயநோயாளிகளை எல்லாம்</span><br /><span style="color:#339999;">காதலிக்கச் சொல்லுங்கள்....</span><br /><br /><span style="color:#339999;">இதயமே இல்லாமல்</span><br /><span style="color:#339999;">வாழப் பழக</span><br /><span style="color:#339999;">அது ஒன்றே தான் வழி....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">***********************************************<br />மது</span><br /><span style="color:#339999;">எல்லாவற்றையும்</span><br /><span style="color:#339999;">மறக்கச் செய்கிறது....</span><br /><br /><span style="color:#339999;">காதலோ</span><br /><span style="color:#339999;">உன்னைத் தவிர</span><br /><span style="color:#339999;">எல்லாவற்றையும்</span><br /><span style="color:#339999;">மறக்கச் செய்கிறது.....</span><br /><br /><span style="color:#339999;">இது கொஞ்சம்</span><br /><span style="color:#339999;">விநோதமான போதை.....</span><br /><span style="color:#339999;"></span><br /><span style="color:#339999;">************************************************</span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-8766210514019731522007-11-12T21:17:00.000-08:002007-12-20T21:15:12.296-08:00காத்திருப்புக்களின் கையிருப்புகள்<span style="color:#339999;">அஞ்சறைப் பெட்டிக்குள்</span><br /><span style="color:#339999;">அடைக்கலமான</span><br /><span style="color:#339999;">அம்மாவின் சிறுவாடு....</span><br /><br /><span style="color:#339999;">பஞ்சாரத்துக் கோழிகளாய்</span><br /><span style="color:#339999;">மாடப்பிறைக்குள்</span><br /><span style="color:#339999;">அடைகாக்கப்பட்ட</span><br /><span style="color:#339999;">முட்டை விற்ற சில்லரை...</span><br /><br /><span style="color:#339999;">திருப்பதிமலைக்கும்</span><br /><span style="color:#339999;">தீர்த்த யாத்திரைக்கும்</span><br /><span style="color:#339999;">மஞ்சள் துணியில் போட்ட</span><br /><span style="color:#339999;">வேண்டுதல் முடிச்சு....</span><br /><br /><span style="color:#339999;">சுட்டித் தம்பியின்</span><br /><span style="color:#339999;">சுற்றுலாக் கனவுகளோடு</span><br /><span style="color:#339999;">மண்டை உடைக்கப்பட்ட</span><br /><span style="color:#339999;">உண்டியல் புத்தன்....</span><br /><br /><span style="color:#339999;">அத்தனைக்கும்</span><br /><span style="color:#339999;">மலர்வளையமாய்</span><br /><br /><span style="color:#339999;">கடற்கரையின்</span><br /><span style="color:#339999;">வெயில் தின்ற மணற்பரப்பில்</span><br /><span style="color:#339999;">திட்டுத்திட்டான வெறுமையோடு</span><br /><span style="color:#339999;">உனக்கான காத்திருப்பின்</span><br /><span style="color:#339999;">நெடுகிலும்</span><br /><span style="color:#339999;">வாடாமல் உள்ளங்கைகளில்</span><br /><span style="color:#339999;">நான் பத்திரப்படுத்திய</span><br /><span style="color:#339999;">மலர்க்கொத்து....</span><br /><br /><span style="color:#339999;">மௌனசாட்சியாய்</span><br /><span style="color:#339999;">கனக்கின்ற</span><br /><span style="color:#339999;">என் இதயத்தோடு</span><br /><span style="color:#339999;">சட்டைப்பைக்குள் இருந்து</span><br /><span style="color:#339999;">துக்கம் அனுஷ்டிக்கும்</span><br /><span style="color:#339999;">உனக்கான</span><br /><span style="color:#339999;">என் பிறந்தநாள் பரிசு...<br /> </span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-47658141359792038772007-11-12T19:39:00.000-08:002007-12-20T21:13:54.521-08:00டூரிங் டாக்கீஸ் கனவுகள்"சினிமா என்கிற ஒன்று தமிழ் மக்களின் வாழ்வோடு பிரிக்கவேமுடியாத ஒன்றாக ஆகி விட்டது அல்லவா???".. அண்மையில் திரு.சுஜாதா அவர்கள் எழுதிய "கனவுத்தொழிற்சாலை" வாசித்துக் கொண்டிருந்தேன் (எத்தனையாவது தடவை என்று நினைவில் இல்லை). அப்போது என் மனதில் தோன்றிய சிந்தனை தான் இது... ஒவ்வொரு தமிழனும் அவனது சிறு வயது முதலே ஏதேனும் ஒரு வகையில் இந்த மாயக்கண்ணாடியால் ஈர்க்கப்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டோ தான் இருக்கின்றான்..தமிழனின் ரசனைக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன...<br /><br /><br />சினிமா ஆசையில் சின்ன வயதில் நண்பர்களோடு சேர்ந்து நான் அரங்கேற்றிய கூத்துக்களுக்கும், அடித்த கொட்டத்திற்கும் பஞ்சமே கிடையாது.... அத்தனைக்கும் சூத்திரதாரியான குரல் எது??????<br /><br />"அன்புள்ளம் கொண்ட சினிமா கலாரசிகர் பெருமக்களே.. நமது தைலம்மை திரையரங்கில் வெற்றி முரசு கொட்டி வெண்திரையில் பவனி வருகிறது...." என்கின்ற சினிமா கொட்டகையின் அறிவிப்பு தான்....<br />இந்த அறிவிப்பு வந்த உடன் அடுத்த நிமிடம் நாங்கள் பெட்டிக்கடையில் தான் இருப்போம்.. புதிதாக வந்திருக்கும் திரைப்ப்டத்தின் பாட்டுப்புத்தகத்தை வாங்கத்தான் அங்கே அவசரமாக கூடிய கூட்டம். பாட்டுப் புத்தகம் கையில் வந்து விட்டால் போதும்... தமிழகத்தின் அத்தனை பாடகர்களும் நாங்களே தான் என்று எண்ணிக் கொண்டு எங்கள் கச்சேரியை ஆரம்பித்துவிடுவோம்... இதில் பாதிக்கப்பட்டு வீடுமாற்றிக் கொண்டு போன அக்கம்பக்கத்துக்காரர்களின் சாபத்தைக் கணக்குப் போட்டால் ஏழேழு ஜென்மத்துக்கு விமோசனமே கிடைக்காது... அத்தனை இனிமையாக பாடி இருக்கிறோம்...<br /><br /><br />எப்படியாவது அப்பாவை கெஞ்சிக் கூத்தாடி சினிமாவுக்கு அழைத்துச்செல்ல வைக்கின்ற சாமர்த்தியங்கள் அத்தனையும் யாரும் சொல்லித்தராமலேயே எனக்கு அப்போது இருந்தது. அப்பா ஊருக்குள் பெரிய மனிதர் என்பதால் நாற்காலி வரிசை தான் எங்களுக்கு (எங்கள் ஊர் சினிமா கொட்டகையின் வி.ஐ.பி வரிசை அது)....<br /><br />சூப்பர் ஸ்டார் படங்கள் என்றால் நாங்கள் நிலைகொள்ளாத மகிழ்ச்சியில் தான் இருப்போம்... அவரின் ஒவ்வொரு ஸ்டைலும் எங்களைக் கட்டிப்போட்டது போல மயக்கி வைத்திருந்தது.... வாயில் சிகரெட்டை அவர் தூக்கிப் போட்டுப் பிடிக்கின்ற பாணியை இடைவேளைத் தட்டுமுறுக்கை வாயில் தூக்கிப்போட்டுப் பிடிப்பதிலேயே ஆரம்பித்துவிடுவோம்...<br /><br /><br />இந்த ரஜினி லாகிரி தலைக்கேறியதால் நாங்கள் வெள்ளை நிறத்தில் சாக்பீஸ், சிலேட்டுக்குச்சி, உடைந்த பேனா மூடி என்று எது கிடைத்தாலும் வாயில் விட்டெறிய ஆரம்பித்தோம்... எங்களின் இந்த கலைத்தாகத்தை தீர்ப்பதற்காகவே எங்கள் ஊரில் அப்பொழுது விற்பனைக்கு வந்தது 'சிகரெட் மிட்டாய்'.... சிகரெட் போன்ற காகிதத்தில் சுருட்டப் பட்ட மிட்டாய் அது... கையில் சிகரெட் மிட்டாயை வைத்துக் கொண்டு அம்மா எதிரில் ஸ்டைலாக ஊதிக்காட்ட தயிர் கடைகிற மத்து ரெண்டாக முறிந்தது அன்று...<br /><br /><br />அதோடு விடவில்லை நான்.. பைக்கில் இருந்து முன்பக்கமாக காலைத் தூக்கிப்போட்டு அவர் இறங்கும் ஸ்டைலை பரிசோதனை முயற்சியாய் எனது சைக்கிளில் செய்துபார்க்க, பிரேக்கு கம்பிகளில் மாட்டி டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கிழிந்தது கால்சட்டை.. நல்ல வேளை கால்சட்டையோடு போயிற்று...இதற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் அமைதியாக கழிந்தன..<br /><br /><br />எங்கள் அமைதியை குலைக்க ராமராஜன் நடித்த படம் ஒன்று வெளியானது எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில்... கையில் கொட்டாங்கச்சி வயலின் வைத்துக் கொண்டு அவர் நடித்த அந்த படத்தின் பாதிப்பு மீண்டும் ஒரு கிறுக்குத் தனத்திற்கு பாதை வகுத்தது....<br /><br />"டேய் எப்புடியாச்சும் அந்த வயலின வாங்கிறனும்டா.." என்று நண்பர்கள் குழாம் உசுப்பேற்றிவிட, பக்கத்து ஊர் திருவிழாவில் அதை நிரைவேற்றுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்...<br /><br />ஏற்கனவே எனக்கு விசில் வாங்கிக் கொடுத்து பாதி பஸ் பயணத்தில் நான் ஊதி சிக்கலில் மாட்டிவிட்டிருந்ததால் எனக்கு அது போன்ற எதையும் வாங்கியே கொடுக்கக் கூடாது என்ற தீர்மானத்தில் இருந்தார் என் அப்பா.... இருந்தாலும் எனது சினிமா போதை தலைக்கேறி இருந்ததால் அதை நிரைவேற்றுவதில் கருமமே கண்ணாயிருந்தேன்....<br /><br /><br />நீண்ட ரகளைக்குப் பின் எனது முயற்சியில் வெற்றியோடு வீடு திரும்பினேன்...கையில் வயலின் வந்த உடன் வாசிப்பு என்ற பெயரில் கரகரகரவென்று நான் தறிகெட்டு மேலும் கீழுமாய் இழுக்கத்தொடங்க... ராகம் வந்ததோ இல்லையோ பக்கத்தில் இருந்தவர்கள் காதுகளில் ரத்தம் வராத குறைதான்... அன்று கிடைத்த பூசையோடு வயலின் வாசிப்பு முடிவுக்கு வந்தது...<br /><br />அப்பாவோடு சினிமாவுக்கு சென்றால் இருக்கும் சிற்சிறு இடைஞ்சல்களை மனதில் கொண்டு நண்பர்கள் பட்டாளத்தோடு செல்ல ஆரம்பித்த காலம் அது... ஆண், பெண் வரிசைக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவரின் மீது ஏறி ரயில்வண்டி ஓட்டியது, தரைடிக்கெட்டில் படம் பார்க்க குவித்த மணல்முட்டுக்களில் காட்டுக் கருவேலங்காய்களை ஒளித்துவைத்து அதில் உட்கார்ந்தவர்களை அவஸ்தைக்குள்ளாக்கியது, "ஓளி வரும் பாதையில் பிளேடைவைத்தால் திரை கிழிஞ்சு போயிரும்டா" என்று எவனோ கிளப்பிவிட அதை உண்மை என்று நம்பி கையை விட்டு ஆப்பரேட்டரிடம் தர்ம அடிவாங்கிய நண்பனின் கதை என்று எங்கள் கோஷ்ட்டியின் அட்டூழியங்கள் எல்லையில்லாமல் போன காலம் அது...<br /><br />இந்த செய்திகள் ஏதோ ஒரு புண்ணியவான் மூலமாக அப்பாவின் காதுகளுக்குப் போக அத்தோடு சினிமாக் கொட்டகைக்கு மொத்தமாக முழுக்குப் போட வேண்டிவந்தது... மனம் நொறுங்கிப் போன நிலையில் ஒரு நண்பனின் வாயில் இருந்து வந்த அந்த வாசகம் காதுகளில் தேன் பாய்ச்சியது... அந்த திருவாசகம் "பேசாம நாமளே படம் எடுத்துறுவோம்டா...."<br /><br />படம் எடுப்பதற்கு முன் எங்களை இதற்கு தூண்டியது எது என்று நான் சொல்லியாக வேண்டும்... திரையரங்குகளில் இருந்து வெட்டி எறியப்படும் துண்டு ஃபிலிம்களை பெட்டிக்கடைக் கிழவி ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்றுவந்தது... அதை வாங்கி ஈர்க்கங்குச்சிகளில் செருகி நாங்கள் பார்த்து மகிழ்ந்தது உண்டு... இந்த துண்டுப் படங்களை வாங்க கிராக்கி அதிகமானதால் ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்ற கிழவி நாலணாவுக்கு மூன்று என்று விற்கத்தொடங்கியது... கிழவியின் இந்த விலைவாசி உயர்வைக் கண்டித்து நாங்கள் போட்ட சண்டை தான் எங்கள் பொதுவாழ்வின் முதல் விலைவாசி உயர்வுப் போராட்டம்..<br /><br /><br />இந்த சண்டையின் தொடர்ச்சியாய் ஆப்பரேட்டருக்கு பீடிக்கட்டு வாங்கிக் கொடுத்து துண்டு ஃபிலிம்களுக்கு நேரடி கொள்முதல் ஆரம்பித்துக் கொண்டோம்..<br /><br />எங்களில் கொஞ்சம் அறிவாளியான ஒருவன் தான் இந்த படமெடுக்கும் யோசனையைச் சொன்னவன். படமெடுப்பதென்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று பெரிய அளவில் எதுமில்லாமல்.. அப்பாவின் வேட்டியோடு முடிந்து விடுகிற சமாச்சாரம் தான்.<br /><br />நண்பன் தனது தொழில்நுட்ப வேலையை ஆரம்பித்தான்... வீட்டின் முற்றத்தில் வெளிச்சம் விழுகிற இடத்தில் ஒரு பூதக்கண்ணாடியை (லென்ஸ்)சாய்த்து வைத்து அதன் வெளிச்சம் வீட்டினுள் விழுமாறு செய்தான்... எங்களில் இருவர் சுவற்றில் அப்பாவின் வேட்டியை இரண்டு புறமும் பிடித்துக் கொண்டோம்... வெளிச்சத்திற்கும் திரைக்கும் இடையில் துண்டுப்படச் சுருளை ஒட்ட... மெல்ல உருவம் அசைவது போன்ற தோற்றம் திரையில் ஏற்பட்டது... நாங்கள் எடுத்த முதலும் கடைசியுமான படம் இது தான்...<br />காலத்தின் வேகத்திற்கு ஏற்ப ஓடவேண்டி இருந்ததாலும் பள்ளியில் மேல்வகுப்புக்களுக்கு சென்றுவிட்ட காரணமும் சேர்ந்து எங்கள் சினிமா கனவுகளைக் கரைத்துக் கொண்டோடிவிட்டது...<br /><br />கால்சட்டையில் முடிந்து வைத்த கனவுகள் கரைந்து போயிருக்கலாம்... ஆனால் கால்சட்டைப் பருவந்தொட்டே இதயத்துக்குள் போட்ட எத்தனையோ கனவுகள் காலப் பெருவெள்ளத்திற்குப் பிறகும் இன்றும் ஞாபக முடிச்சுக்களை நெஞ்சில் அடையாளமாக விட்டுச் சென்று இருக்கின்றன...<br /><br />என்னைப் போலவே என்னோடு அன்று விளையாடிய அத்தனை பேரின் மனசிலும் அவைகள் நிச்சயம் இருக்கும் தானே???????Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-25824278425584180842007-11-02T22:41:00.000-07:002007-12-20T21:15:12.296-08:00ஆதலினால்....<span style="color:#339999;">*********************************************<br />உழுதுபோட்ட நிலம் என் இதயம்<br />அறுத்து முடிந்த நிலம் உன் இதயம்...<br /><br />ஆம்..<br /><br />என் வயலின் பரப்பில் எல்லாம்<br />உன் பாதத்தின் சுவடுகள்...<br /><br />உன் வயலின் தாள்களில் எல்லாம்<br />என் பாதத்தின் ரத்தங்கள்...<br /><br />*************************************<br /><br />ஒரு குழந்தையைப் போல<br />என் இதயத்தோடு<br />நீ விளையாடுகிறாய்...<br /><br />விளையாடிவிட்டு<br />உன் வீட்டுக்கும்<br />எடுத்துச்சென்று விடுகிறாய்...<br /><br />ஒரு குழந்தையைப் போல<br />எதையாவது மறந்து<br />என் வீட்டில் விட்டுச் செல்...<br /><br />நமது உலகத்தில் உள்ள<br />ஒரே விளையாட்டுப் பொருள்<br />இதயம் மட்டும் தானே....<br /><br />********************************<br /><br />எனது எந்தக் கவிதைக்கும்<br />பிள்ளையார் சுழி<br />உனது பெயர் தான்...<br /><br />அது போதும்..<br />வயதுக்கு வந்த வார்த்தைகள்<br />என் வாசலில்<br />வரிசையில் நின்று ஏங்கும்...<br /><br />***********************************<br /><br />பற்றி எரிகிறது...<br /><br />உன் விழிக்குளத்தில்<br />நான் விழும் வரையில்<br />ஈரமாகவே இருந்த<br />என் இதயம்....<br />************************************<br /><br />ஒரு உலோபியின்<br />இரும்புப்பெட்டியாய்<br />உன் இருதயம்...<br /><br />பூட்டிய சாவியோ<br />ஒளிந்து கொண்டிருக்கிறது<br />உதடுகளுக்குள்...<br /><br />**************************************<br />நான் + நீ + காதல் = கவிதை<br /><br />அட<br />கணக்குப் பாடம் இனிக்கிறது....<br />*****************************************</span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-12122299912745199972007-11-01T08:27:00.000-07:002007-12-20T21:13:54.521-08:00கும்பிடப் போன தெய்வம்<div align="left">ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம்.... சலூன் கடையில் முடிதிருத்துபவரின் கட்டுப்பாட்டில் தலையை கொடுத்துவிட்டு வேறு வழியே இல்லாமல் எதிரே இருந்த வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிக்கு பார்வயை செலுத்தினேன்... "கும்பிடப் போன தெய்வம்..." சாயாசிங்கின் வடிவில் படு குத்தாட்டத்தைப் போட்டுக் கொண்டிருந்தது... கதாநாயகன் அதிர்ஷ்டசாலி என்பதாலோ என்னவோ சாமி சாயாசிங்கின் மேல் வந்து ஆடிக்கொண்டிருந்தது... நிஜ வாழ்வில் இந்த சாமிகள் இந்த அளவிற்கு ராக, தாள, பாவங்களோடு ஆடாவிட்டாலும் என்னென்ன ஆட்டங்கள் ஆடியிருக்கின்றன என்று சிந்திக்கத் தொடங்கினேன்....</div><div align="left"><br />பொதுவாக அருள்வந்து ஆடும் சாமிகள் எல்லாமே என்னென்ன காரணங்களுக்காய் ஆடுகின்றன என்று யோசித்தாலே போதும் சாமிகளின் கல்வி, அறிவு, இன்ன பிற தகுதிகள் எல்லாமே பளிச்சென்று தெரிந்துவிடும்... எந்த சாமியும் இதுவரையில் மனிதர்கள் பிரச்சனைக்காக ஆடியதாக வரலாறு மட்டுமல்ல.. அறிவியல்,கணக்கு, ஆங்கிலம் என்று எதுவுமேயில்லை... சைவச் சாமியாக இருந்தால் "சக்கரப் பொங்கல்ல ஏன்டா இனிப்பு கம்மியா இருக்கு" என்றோ அசைவச் சாமியாக இருந்தால் "எனக்கு ரத்தம் வேணும்டா...ஆட்டுரத்தம்...." என்ற அளவிலேயே அவர்கள் ஆட்டங்கள் முடிந்து விடுகின்றன..."காவிரியில தண்ணிய தொறந்து விடுங்கடா!!!!!!" என்றோ அல்லது "ஏன்டா சினிமாவுல கதாநாயகிக்கு மட்டும் துணிப்பஞ்சம்???" என்றோ கேள்விகளை கேட்பதில்லை... பாவம்.... சாமிகளாய் இருந்திருந்தால் நிச்சயம் அப்படிக் கேட்டிருக்கும்... எங்களூரில் இது போன்ற வேடிக்கைகளை நிறைய கண்டு பரிச்சயப்பட்டு போயிருப்பதால் உங்களுக்கு சொல்வதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை... </div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left">சுனாமியைப் போல திடீர் என்று தோன்றுகிற சாமிகளின் இடமாக இருந்தது இரண்டே இரண்டு தான்... இதில் முதன்மையானது சாமிகளின் சரித்திரப் புகழ் பெற்ற "அரசமரத்தடி"..<br />ஊரின் எல்லையை ஒட்டி இருந்த அந்த அரசமரத்தில் ஒரு காவல் தெய்வம் குடி இருப்பதான நம்பிக்கை உண்டு எங்கள் ஊரில்... அவ்வப்போது அந்த மரத்தடியில் பூசைபோட்டு படையல் இடுவார்கள்... எனது கால்சட்டைப்பருவத்தில் அந்த பூசைகளுக்கு தவராமல் நான் சென்று விடுவேன்... இதற்கு முக்கிய காரணங்கள் பூசையின் முடிவில் கொடுக்கப்படுகிற பிரசாதமும்... பூசையை முடிப்பதற்காக அருள் வந்து ஆடும் சாமிகளின் வேடிக்கைகளும் தாம்.....</div><div align="left"> </div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left">சாமிகளும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் போலத்தான்..ஒருவரின் பாணியை இன்னொருவர் பின்பற்றுவதேயில்லை... அதுவரையிலும் சாந்த சொரூபியாக இருப்பவர் பூசை முடிவதற்கு குறிப்பிட்ட வினாடிகளூக்கு முன் "ஓஹாய்ய்ய்ய்ய்..." என்று கத்தியபடி உடலை முறுக்கியபடி, கண்களை சிவப்பாக்கி கால்களைப் பின்னியபடி உதைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்... இதான் சமயமென்று அவரது ஆதரவாளர்கள் (இவர்கள் இல்லை என்றால் சாமியாடுபவர்கள் பாடு திண்டாட்டம் தான்)"ஆஹா..தெய்வம் பிரசன்னமாயிடிச்சப்பா......" என்றபடியே சாமியிடம் ஓடுவார்கள்... "எதுக்காக வந்திருக்க..இப்பொ என்ன வேணும் உனக்கு..சொல்லுப்பா..சொல்லு..." என்று வாஞ்சையோடு விசாரணை நடத்திக் கொண்டிருபார்.. ஒருபுறம் வேடிக்கை பார்க்கவந்த மக்கள் கூட்டம் கன்னங்களில் "கடம்" வாசித்துக் கொண்டிருக்கும்...</div><div align="left"><br />முதலிரவு அறையில் மாட்டிய கணவனிடம் மகஜர் கொடுக்க காத்திருக்கும் மனைவியைப் போல சாமியும் தனது கோரிக்கைப் பட்டியலுடன் தயாராக காத்திருக்கும்.. இது தான் சமயம் என்று ஆரம்பிக்கும் சாமியின் முதல் குறி பெரும்பாலும் பூசாரியின் சம்பளமாகத் தான் இருக்கும்... "அவன் என்ன மதிக்கலடா... அவனுக்கு காசு தான் பெருசாப்போச்சு..." என்றவாறே "தனது" கருத்தை மெல்ல ஆரம்பிக்கும்... இறுதியில் பூசாரி கோவமாகி "சாமிக்கு சனியன் புடிச்சுப் போச்சு" என்றவாறே அந்த இடத்தைவிட்டு போய்விடுவார்... இது ஒருவகை சாமி...</div><div align="left"><br />தனது பிரதாபங்களைக் காட்ட நினைத்துக் குறிசொல்லி சிக்கலில் மாட்டிக்கொண்ட சாமியின் கதை இன்னும் சுவையானது... வழக்கமான அரசமரத்தடிப்பூசையில் அன்றைய சாமி வராததால் பூஜையை முடித்துவைக்க வேறு வழியில்லாமல் அவசரமாக ஒரு "சாமி" அவதரித்தது... பழக்கமின்மையின் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமலும், "பக்தகோடிகளின்" அன்பு மழையாலும் தேவை இல்லாமல் குறிசொல்லத் தொடங்கியது... ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு வந்த சாமி, கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணைப் பார்த்து "உனக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும்" என்று சொல்லிவைக்க... "இவரு பொய்சொல்றாரு...பொய் சொல்றாரு..." என்றபடி "ஓ" வென்று அவள் அழத்தொடங்கிவிட்டாள்.. அது தெரியாத குழந்தை அவள்... சாமியும் வேறு வழியில்லாமல் "பே" வென்று முழிக்கத்தொடங்கிவிட்டது...</div><div align="left">இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக நடந்த ஒரு சம்பவம் இன்று நினைத்தாலும் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்... சாமிக்கும்... அப்பாசாமிக்கும் நடந்த யுத்தம் அது... </div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left">ஒருநாள் பூசையில் சாமி திடீரென்று "டே......ய்ய்ய்ய்ய்ய்....நான் இனிமே இந்த மரத்துல இருக்கமாட்டேன்டா..அந்தமரத்துல தான் இருப்பேன்..." என்று ஒரு புதிய சர்ச்சையை கிளப்ப..கடுப்பாகிப்போன பூசாரி.. "நீ என்ன நெனச்சுகிட்டு இருக்க உம் மனசுல... நாளைக்கு நீ போஸ்ட்டு மரத்துல இருக்கேன்னு சொன்னா அதுக்கெல்லாம் பூசைவைக்க முடியுமா" என்று எகிறத் தொடங்க... சண்டையை சமாதானப் படுத்த நினைத்த சாமியின் அப்பா "அப்பாசாமியாக" பிரசன்னமாகியது... அது தான் சிக்கலே... ஏற்கனவே பூசாரியின் பேரில் இருந்த கடுப்பிலும், அப்பா(சாமி) தொல்லையாலும் வெகுண்டு எழுந்த சாமி, தந்தை என்றும் பாராமல் துரத்தத் தொடங்க.. அப்பாசாமி அலறி அடித்துக் கொண்டு மரத்தைச் சுற்றி ஓடத்தொடங்கியது... சாமியும் விடவில்லை.. வயதுமுதுமையால் ஓடமுடியாமல் கீழே விழுந்துவிட்ட அப்பாசாமியை மேலே ஏறி உட்கார்ந்துகொண்டு புரட்டியெடுக்கத்தொடங்கியது.. இதைக் கண்டு பதறியடித்துக்கொண்டு சுற்றியிருந்தவர்கள்.."அய்யயோ மேலே இருக்கறவரைத் தூக்குங்க..." என்று கத்த ஆரம்பிக்க (இல்லையென்றால் கீழே இருந்தவரை ஒரேயடியாக தூக்க வேண்டியிருந்திருக்கும்) ஒரே களேபரத்தில் முடிந்தது பூசை.. அதில் இருந்து அரச மரத்து சாமி கொஞ்சம் எச்சரிக்கையோடு தான் "அவதரித்தது"...</div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left">இதேபோல இன்னொரு சம்பவம் கோயில் திருவிழாவில் நட்ந்தது... திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் ஏதோ தடங்கல் ஏற்பட்டுவிட...திடீர் உப்புமாவைப்போல "திடீர் சாமி" பிரசன்னமாகியது.."என்னத் திரும்ப என் எடத்துக்கே கொண்டுபோங்கடா.."என்று உத்தரவு போட்டது... காலகாலமாய் இதில் கரைகண்ட "அப்பாசாமி" பதிலுக்கு பிரசன்னமாகி "நான் ஊர்வலம் போகணும்டா..." என்று மிரட்டியது... சாமிகளுக்குள் நடந்த இந்த சர்ச்சைகளைக் கண்டு குழம்பித்தவித்த மக்கள் கடைசியில் "சீனியர்"சாமியின் முடிவுக்கு கட்டுப்பட்டார்கள்....</div><div align="left"><br />சாமிகளின் இதுபோன்ற அட்டகாசங்களால் கடுப்பாகிப்போயிருந்த பூசாரி..இதற்கு என்ன செய்யலாமென்று யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார்..அது தான் "திரிப்பழம் கொடுப்பது".... பொதுவாக சாமிகளை மலையேற்ற விபூதியையோ அல்லது பச்சைக் கற்பூரத்தை கொளுத்தியோ தான் சாமியின் வாயில் போடுவார்கள்...இதிலெல்லாம் பழக்கப்பட்டுப் போயிருந்ததால் சாமிகளின் அடாவடி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது... திரிப்பழம் என்பது எண்ணெய் ஊற்றி நன்றாக எரிந்துகொண்டிருக்கும் விளக்குத்திரி... நீண்டநேரமாய் எரிவதால் எளிதில் வாயில் அடக்கிவைத்துக் கொள்ளமுடியாது... இதில் முதல்பலி கோயில் தீமிதி நாளில் நடந்தது...</div><div align="left"><br />தீமிதி நாளில் ஒன்று இரண்டல்ல.. ஏராளமான சாமிகள் அவதரித்து ஆடும்.. அதில் ஒரு சாமி பூசாரியிடம் ஏடாகூடமாகப் ஏதோ பேசப்போக..."திரிப்பழம் கொடுத்துடுவேன்" என்று பூசாரி மிரட்ட.."திரிப்பழம்" என்றால் ஏதோ ஞானப்பழம் என்று நினைத்த சாமி... குடுடா..குடுடா.. என்று ஏகத்துக்கும் எகிற.. சாமிக்கு திரிப்பழம் கொடுக்கும் முதல் வைபவம் இனிதே அரங்கேறியது... அலறி அடித்து சாமி போட்ட கூப்பாட்டில் மற்ற சாமிகள் போன இடம் தெரியவில்லை... அதிலிருந்து ஊருக்குள் சாமிகளின் ஆட்டம் ஒட்டுமொத்தமாய்க் குறைந்தது....</div><div align="left"> </div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left">இதையெல்லாம் பார்க்கும் போது என் மனதில் அந்த வயதில் தோன்றியது என்னவென்றால்..இவ்வளவு கூத்துக்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறதே..இந்த தெய்வம் நின்று தான் கொல்லுமா??" என்று நினைத்துக் கொள்வேன்... ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் எங்களூர் கோயிலில் காவலாளியை கட்டிவைத்துக் கொலைசெய்துவிட்டு சாமியின் நகைகள் அனைத்தையும் கொள்ளை அடித்துச்சென்ற செய்தியை கேள்விப்பட்டதும் விக்கித்துப் போனேன்... இப்போது தோன்றுகிறது.."தெய்வம் நின்று கொல்லுகிறதோ இல்லையோ..கொலையைப் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறது..."</div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-59872143036932382922007-10-30T08:14:00.000-07:002007-12-20T21:15:12.297-08:00ஈத்தைகள்<span style="font-size:100%;color:#3333ff;"><span style="color:#000000;">(புல்லாங்குழல் செய்கின்ற மூங்கிலை "ஈத்தை" என்று சொல்வார்கள்...<br />இதில் முதல் கவிதை "ஈத்தை" என்ற தலைப்பிலேயே எழுதப்பட்டது.... ஆனால் வெறும் கூடு இசையை படைப்பவனால் குழல் ஆவதைப்போல... வெறும் வார்த்தைகள் கூட படிப்பவனால் கவிதை ஆகின்றன என்பது என் எண்ணம்... அதனால் இவைகளுக்குப் பொதுவாய் இதையே தலைப்பாகச் சூட்டியிருக்கிறேன்.....)<br /></span><br /><br /><span style="color:#339999;">இறந்த பிறகும்<br />என் இரைப்பை நிறைப்பேன்...<br /><br />உங்கள் இதயமென்னும்<br />கருப்பை நிறைக்க....<br />***************************************<br /><br />வீதியே வெளிச்சம் இன்றித் தவிக்கிறது<br />கொஞ்சம் வெட்கப்படேன்...<br /><br />****************************<br /><br />நட்பு....<br /><br />என்<br />இதயமென்னும் சிலுவையில்<br />இதை அறைந்தார்கள்...<br /><br />அதிசயம்!!!<br />உயிர்த்தெழுந்தது<br />"சிலுவை"....<br /><br />**************************<br /><br />உருகி உருகி<br />ஒரு கவிதை செய்தேன்<br />உலகத்திற்காக...<br /><br />பைத்தியம் என்றென்னை<br />பரிகசித்தார்கள்....<br /><br />கலங்காது நானொரு<br />கவிதை செய்தேன்<br />உனக்கே உனக்காக...<br /><br />கௌரவிக்க வந்த நீதான்<br />சொல்லிப்போனாய்<br />"பாவம் மனநோய்"என்று<br />"கௌரவமாய்..."<br /><br />*******************<br /><br />என்னடி கோபம்<br />என்மீது உனக்கு...<br /><br />முன்போல் இப்போதெல்லாம்<br />நீ முகங்காட்டுவதேயில்லை...<br /><br />பழகிய நாட்களின் நினைவுகளை<br />பதியன் போட்டாயே மனதில்...<br />மறந்தா போவேன்...<br /><br />உன் முகம் பார்க்க அலையும்<br />எங்கள்<br />கிராமத்து நண்பர்கள் மனசு..<br /><br />உன் தொலைபேசி எண்ணையாவது<br />கண்டுபிடித்துவிட துடிக்கிறார்<br />என் தந்தை...<br /><br />உபதேசிக்கிறாள் அடிக்கடி<br />என் தாய்...<br /><br />உன்னோடு நான் என்றும்<br />உரவாடலாகாதாம்...<br /><br />பாவம்<br />அறிவாளா அவள்...<br />வாழ்க்கையே இல்லை<br />நீ<br />வராவிட்டால் என்று...<br /><br />கடைசியாய்<br />கொடைக்கானல் மலையில்<br />பேருந்தின் பின்<br />ஆரத்தழுவி<br />என் இதயம் நனைத்தவளே....<br /><br />மீண்டும்<br />மின்சாரம் தெரிக்கும்<br />உன் முத்ததுக்காய்<br />உடலெங்கும் உதடுகளாய் நான்...<br /><br />மனசுவைக்க மாட்டாயா<br />"மழையே??'<br />***************************************</span></span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-75804043403858622802007-10-30T01:23:00.000-07:002007-12-20T21:13:54.521-08:00மைக் டெஸ்டிங்..ஒன்..டூ...த்ரி...சில தினங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து என் தம்பி அனுப்பி இருந்த ஐ பாடில் பாடல்களை நிரப்புவதற்காக பாடல்களைத் தேடிக் கொண்டிருந்த போது "இந்த பாட்ட எல்லாம் கேட்டுப் பாருங்க தம்பி" என்று எனது நண்பர் ஒருவர் சில குறுவட்டுக்களைத் தந்தார்... நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய பிறகு அந்தப் பாடல்களைக் கேட்காலானேன்... அத்தனையும் என் பாலபருவத்தில் நான் கேட்டு வளர்ந்த பாடல்கள்.. கையில் ஐபாட் இருந்தும் மனசு மட்டும் ஏனோ அதில் லயிக்கவேயில்லை. எனது கால்சட்டைப் பருவத்தில் பாடல்களைக் கேட்க காரணமாயிருந்த, சினிமாவின் மீது ஒரு மிகப்பெரிய கவர்ச்சியை எனக்குள் ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகளையும் அதன் முதுகெலும்பாய் இருந்த எங்களூர் மைக் செட்டும் என் நினைவில் படலம் படலமாய்ப் படர்ந்தன...<br /><br />ஊரின் எல்லைகளிலே இருந்த மாரியம்மன் மற்றும் அய்யனார் கோயில்களில் திருவிழாக் காலங்களில் பிரதானமான இடத்தைப் பிடித்துக் கொண்ட ஒன்று எங்களூர் மைக் செட்.... டால்பி, ஹைஃபய், ஸ்டீரியோஃபோனிக் என்று என்னென்னவோ தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அவைகள் எவையும் எங்களை எதுவும் செய்யாது என்ற தீர்மானமிகு கிராமம் எங்கள் ஊர்.... கூம்புக்கு கொண்டை போட்டது போன்ற ஒரு ஒலிபெருக்கியும், சில கேசட்டுக்களும், ஆதிகாலத்தில் புதுமையின் வடிவமாக கருதப்பட்ட ஒரு டேப் ரெக்கார்டரும் தான் அதன் தொழில்நுட்பம்... குறிப்பாக இரண்டு தருணங்கள்... மார்கழி மாத அதிகாலையில் நாலரை மணிக்கெல்லாம் கணீரென்று ஒலிக்கும் கே.பி.சுந்தரம்பாளின் குரலோடு தொடங்கும்.. பிறகு "நீயல்லால் தெய்வமில்லை" என்று சீர்காழியின் குரலில் மாறி இசை மழை பொழியும், சற்று நேரத்தில் கே.வீரமணி ஒவ்வொரு ஊர் பேராகச் சொல்லி மாரியம்மனை கதறிக் கதறி அழைத்துக் கொண்டிருப்பார்.. அடுத்ததாக லுலுலுலுலுலுலுலு... என்று பயங்கரமான குலவைச் சத்தத்தோடு "செல்லாத்தா... செல்ல மாரியாத்தா..." என்று தனது தனித்துவம் மிகுந்த பாணியில் செல்லாத்தாவோடும் மாரியாத்தாளோடும் உடுக்கையடித்து துள்ளிசை பாடிக் கொண்டிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி.. இறுதியாக.."புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலை" கண்ணதாசன் வரிகளிலும், "ஓராறு முகமும் ஈராறு கரமும்" என்று வாலியின் வரிகளிலும் டி.எம்.எஸ் பாட, வாய்ப்பாட்டில் தொடங்கியது வாலியின் பாட்டோடு முடிவுக்கு வரும்...மணியும் எட்டாகி இருக்கும்... மீண்டும் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து வரைக்கும் இந்த பக்தி மணம் ஊரெல்லாம் கமழும்...<br /><br />மார்கழி மாதம் என்பது அரையாண்டுத் தேர்வு நேரமாதலால் காலையில் அலாரம் வைத்தார் போல இந்தப் பாடல்கள் அமைந்தன... இந்த நேரத்தில் தான் எங்கள் ஊருக்கு ஒரு புதிய பக்தி மார்க்கமும் அதன் விளைவாக மைக்செட்டுக்காரருக்கு யோகமும் அடித்தது...<br /><br />சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பழக்கம் அப்போது தான் அறிமுகமாயிற்று... நன்றாக நான் உறங்குகிற அதிகாலைப் போதுகளில்.. "ஸ்வாமியே..........ஹே.... ஹே...ய்ய்ய்ய்ய்ய்" என்று முதன் முறையாக ஒரு ஒலி திடீரென்று எழுந்ததும் விழுந்தடித்து எழுந்து உட்கார்ந்தது இன்றும் மறக்கவே முடியாது... அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தேடி நான் அலையும் அளவிற்கு அதனால் பாதிக்கப்பட்டிருந்தேன்... மனதுக்குள் தன்னை சிக்கல் சண்முகசுந்தரமாய் நினைத்துக் கொண்டு நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த ஒலியை ஸ்வரப் பிரயோகங்களோடு அவர் வெளிக்காட்ட முயற்சி செய்வார்... ஒலிபெருக்கியொடு கர்ண கவச குண்டலம் போன்றது ஒலிவாங்கி.. அதையும் தான் நாங்கள் என்ன பாடு படுத்தினோம்... தனியாக அய்யப்பனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்த "சாமி" அடுத்தமுறை தன் மகனையும் தயார் பண்ணிவிட்டார்... பக்தி வெறியில் "ஓம் சுவாமியே" என்பதை அவன் "ஓஞ்சாமியே...ஓஞ்சாமியே...ஓஞ்சாமியே.." என்று கத்தத் தொடங்க.."டேய் அது ஓஞ்சாமியேவுமில்ல..ஏஞ்சாமியேவுமில்லடா.." என்று அவனுக்கு பின்னாளில் "சாமி"யே சொற்பொருள் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்...<br /><br />இதேபோல மற்றுமோர் நகைச்சுவை, சித்திரை மாதம் மாரியம்மன் கோயிலில் காப்புக் கட்டும் போது நிகழும்.. "அன்பார்ந்த பக்தகோடிகளே!!!" என்று தொடங்கி..."அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவிளாவை முன்னிட்டு.. விளாவில்..விளாவில்... என்று திக்கி, திணறி விழாவின் விலா எலும்பை போதுமான அளவுக்கு முறித்த பின் விஷயத்துக்கு வருவார்.."இன்று இரவு பத்து மணியளவில் கேப்டன் பிரபாகரன் சிறப்புத் திரைப்படம் திரையிடப்படும்..பக்தகோடிகள் அனைவரும் திரைப்படத்தை தரிசித்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்" என்று பக்தியை தனக்குத் தெரிந்த அளவுக்கு பாடாய்ப்படுத்துவார் அறிவிப்பாளர்... பின்னாட்களில் தொலைக்காட்சியில் பொங்கலுக்கும், தீபாவளிக்கும் சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாகும் என்கிற விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவங்கள் தான் என் நினைவுக்கு வரும்.<br /><br />கோயில்களுக்கு அடுத்ததாய் மைக்செட்டுக்காரரின் ஜீவனோபாயத்திற்கு வழிகோலியவை திருமணம் நடைபெறும் வீடுகள்... "ஓளிமயமான எதிர்காலம்" என்று ஆரம்பிக்கும் செட்டுக்கட்டாத திருமண வீடுகளையே எங்களூரில் பார்க்க முடியாது...போதுமான அளவிற்கு எம்.ஜி.ஆரும், சிவாஜியும், எஸ்.எஸ்.ஆரும் மணமக்களை வாழ்த்திய பிறகு சின்னத்தம்பியும், சின்னக்கவுண்டரும், எஜமானும்,இன்ன பிற எட்டுப்பட்டி ராசாக்களும் வந்து வாழ்த்துவார்கள்..<br /><br />அரசியல் திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.. உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் "வாழ்த்துரையோடு" கல்யாணம் களைகட்டும்.. "நேத்து.... நைட்டு... நான் தலைவர் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது..." என்று வராத தலைவரின் இயலாமைக்கு சரித்திர விளக்கங்களை மேற்கோள் காட்டி முழங்கிக்கொண்டிருப்பார்.<br /><br />திருமணங்களிலேயே இந்தப் பாடென்றால்...தேர்தல் நேரத்தில் என்னென்ன நிகழும் என்று நீங்கள் யோசிப்பது சரிதான்... அதுவரையிலும் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தவர் திடீரென அரசியல் பேச்சாளர் ஆகிவிடுவார்..."பேரன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே (அவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ?)... என்று தொடங்கி..."உங்கள் பொன்னான, கண்ணான, முத்தான, மணியான,அன்பான, அழகான, மேலான வாக்குகளையெல்லாம்...." என்று வளர்ந்து அரைமணி நேரத்திற்கு அடுக்குமொழியில் சொற்போர் நிகழ்த்துவார்...<br /><br />இதில் மைக் செட்டுக்காரருக்கு தான் யோகம்... "அச்சம் என்பது மடமையடா..." என்று ஆரம்பித்து அன்று முழுவதும் கொள்கை முழக்கம் கேட்கும்... பெரும்பாலான கொள்கை விளக்கப்பாடல்களை நான் கேட்டுவளரக் காரணமாய் இருந்தது இது தான்...கண்ணதாசனும், பட்டுக்கோட்டையாரும், வாலியும் எழுதிய கருத்தாழமிக்க பாடல்களும், பாடல்வரிகளும் எனக்கு சினிமாவின் மீது தீராத காதலை உண்டு பண்ணின...<br /><br />முதல் இரண்டும் எங்களூர் மைக்செட்டின் சங்க காலம், மற்றும் இடைக்காலம் என்றால் நவீன காலத்தை தொடங்கி வைத்த புண்ணியத்தை நாங்கள் கட்டிக்கொண்டோம்.. அது வரையில் தென்னை மட்டையில் இருந்து கிரிக்கெட் மட்டைக்கு மாறியிருந்த விளையாட்டை "கௌரவிப்பதாய்" நினைத்துக்கொண்டு அடுத்த கூத்தை அரங்கேற்றினோம்.<br /><br />அய்யனார் கோயிலுக்கு எதிரில் இருக்கும் பெரிய ஆற்றங்கரைத்திடல் தான் எங்களது விளையாட்டு மைதானம். ஊரெல்லாம் தொலைக்காட்சியும், அதன் வாயிலாக கிரிக்கெட் விளையாட்டும் பெருகியதால் நாங்களும் ஒலிபெருக்கியில் எங்கள் "போட்டிகளை நேர்முக வர்ணனை" செய்ய ஆரம்பித்தோம்.. உபயம் மைக்செட்டுக்காரர்....<br /><br />அதுவரை மரியாதையே இல்லாத எனது பள்ளி தேர்ச்சி அறிக்கைக்கு புதிய மரியாதை கிடைத்தது.. "நம்ம செட்டுலயே நல்ல ரேங்க் வாங்குர ஆள் நீ தான்.. அதனால நீ தான் "கமாண்டர்" (அதாவது காமெண்டேட்டர் என்பதாக அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்..வேறொன்றும் இல்லை ஆங்கிலப் பித்து) எனத் தீர்மானமாக சொல்லிவிட்டனர்....<br /><br />மைக்செட்டை தொட்டதுமே மனசுக்குள் ரவிசாஸ்திரி ஆகிவிட்டதாய் ஒரு மிதப்பு வந்துவிட்டது எனக்கு... எனக்குக் தெரிந்த வார்த்தைகளை எல்லாம் போட்டு பேசியதோடு புதிய புதிய வார்த்தைகளை ஆராய்ச்சி செய்ய வேறு தொடங்கினேன்... புள்ளி, குள்ளக்கால், அகலப் பந்து என்று என் தமிழ் ஆராய்ச்சியில் அனைவரும் கொஞ்சம் கலங்கிப் போனது என்னவோ உண்மை தான்...<br /><br />இந்த "கமாண்டர்" வியாதி அடுத்த கட்டத்தை எட்டத் தொடங்கியது... "கமாண்டர்" அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக அலுவலகம் வருமாறு (எங்கே மைக்செட் இருக்கிறதோ அது தான் அலுவலகம்) "அளை"க்கப் படுகிறார்" என்று அறிவித்து அறிவித்து.. என்னை ஒரு ராணுவ தளபதியைப் போல ஆக்கிவிட்டனர்... போதை யாரைத்தான் விட்டது...<br /><br />இந்த வேடிக்கைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு நிகழ்ச்சி போட்டியின் இறுதி நாளில் நடந்தது... வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்குவதற்காக உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரை அழைத்து வந்திருந்தனர்... ஏற்கனவே "கமாண்டர்" போதையில் இருந்த நான், வந்திருந்தவரின் போதையை கவனிக்கவில்லை.... வெற்றிபெற்ற அணியை அறிவிக்கவேண்டியதை விடுத்து.. "இந்த போட்டியைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று அவரிடம் கேட்டுவைக்க...<br /><br />பிரமாதமான "சுதியில்" மைக்கைப் பிடித்து.."நம்ம..... ஐய்யாவூட்டு கொளந்தை.... ஒரு நல்ல கேச்சர்... இன்று அவர்கள் நல்ல பல கேச்சுகளை போட்டார்கள்..." என்று என்னைப் புகழ்வதாய் நினைத்துக் கொண்டு அவர் ஏதேதோ பேசப்போக பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் கொல்லென்று சிரிக்கத் தொடங்க... அவரிடம் இருந்து மைக்கைத் திரும்ப பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...இப்படியாக மைக்செட் ஊருக்குள் நிகழ்த்திய கூத்துக்கள் ஏராளம்...<br /><br />நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் ஊருக்கு சென்றிருந்தபோது மைக்செட்டுக்காரரைப் பர்த்தேன்... மைதானத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்... எப்படி இருக்கீங்க என்று விசாரித்தேன்.. "எங்க தம்பி..முன்ன மாதிரி இப்பொ அவ்வளோ வருமானம் இல்ல... எல்லாரும் பொட்டி வாங்கி வச்சு அலரவுட்டுகிட்டு இருக்காங்க... நம்மள எல்லாம் யாரும் கூப்புடுறது இல்ல... இந்த பசங்க மேச்சுனு சொல்லி எப்பனாச்சு கூப்புடுவாங்க..அவ்வ்ளோதான்.." என்றார் விரக்தியாக...<br /><br />மைதானத்தின் இன்னொரு மூலையில் இருந்து மைக்செட் அலறிக்கொண்டிருந்தது..."ஆடுகளத்தை...ஓடுகளமாக்கிக் கொண்டிருக்கிறார்..." என்று வர்ணனை கேட்டுக்கொண்டிருந்தது... "அடுத்த கமாண்டர் தயார் ஆகிறார் போலும்" என்று எண்ணியவனாக மௌனமாக அந்த இடத்தை விட்டு வந்தேன்...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-58189185954195263582007-10-27T05:20:00.000-07:002007-12-20T21:15:12.297-08:00சிக்கு(ம்) கோலங்கள்....<span style="color:#339999;">**********************<br />ஒரு தடாக தாகத்தில்<br />தவிக்கிறேன் நான்...<br /><br />பாவை நீயோ<br />தண்ணீர் குடத்துடன்..<br /><br />ஓட எத்தனிக்கிறாய்<br />என்னைக் கண்டு....<br /><br />தாவிப் பற்றுகிறேன்<br />உன் தாவணித் தலைப்பு...<br /><br />தலைப்பு கிழிந்து<br />கையோடு வந்தது...<br /><br />உறக்கத்தில் நான்<br />உதைத்துக் கிழித்த போர்வையில் இருந்து.....<br /><br />*************************<br />நான் அழகாய் இருப்பதாய்<br />எல்லாரும் சொல்கிறர்கள்...<br /><br />அவர்களுக்கு எப்படித் தெரிந்தது<br />நான் உன்னை நினைத்துக் கொண்டிருப்பது...<br /><br />************************<br /><br />நீ எப்போது பிறந்திருக்கிறாயோ<br />தெரியாது...<br /><br />நீ எங்கே பிறந்திருக்கிறாயோ<br />அதுவும் தெரியாது...<br /><br /><br />எனக்கு<br />தெரிந்தது அனைத்தும்<br />ஒன்று தான்<br /><br />நீ<br />எனக்காகவே பிறந்திருக்கிறாய்...<br />******************<br />உன் இருதயம்<br />தொலைந்து போனதாய்<br />என்னிடம் சொன்னாய்...<br /><br />இருக்குமிடம் சொல்ல<br />என் நெஞ்சின்<br />இடதுபுறம் தொட்டுக்காட்டினேன்...<br /><br />இன்னமும் எதை நீ தேடுகிறாய்<br />என் சட்டைப்பைக்குள்....<br />*********************<br /><br />முட்டாள் என்றென்னை<br />முன்மொழிந்தவளே..<br /><br />சவமாகும் வரை<br />தவம் செய்தேன்<br />உன்னிடம் சாபம் வாங்க....<br /><br />நீ யுத்தம் அறிவித்தபோது<br />நிராயுதபாணியாய்<br />நிற்கிறேன் நான்...<br /><br />காரணம் தெரியாமலே<br />கைப்பிடி போட்டுத் தந்திருக்கிறேன்<br />உன் கத்திக்கு....<br /><br />என் இருதயம் தான்<br />நறுக்கப் போகிறாய்<br />என்று<br />இறுதிவரை உணராமல்....<br /><br />இரும்பல்ல என் இருதயம்<br />அதனால் தான்<br />உன் வாள்வீச்சில் வலுவிழந்து<br />தொங்கிப்போய்விட்டது அந்த<br />தோற்கேடயம்....<br /><br />குத்திக் காட்டுகிறேன்<br />என்பாய்...<br />இல்லையில்லை<br />நீ<br />குத்தியதைக் காட்டுகிறேன்...<br /><br />வாள்பிடித்த கைகளில்<br />வடு மறைந்து போயிருக்கலாம்....<br />ரணப்பட்ட இதயமின்னும்<br />ரத்தம் சொட்டிக் கொண்டேதான்<br />இருக்கிறது...<br /><br />முட்டாள் என்றென்னை<br />முன்மொழிந்தவளே........</span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5195257422210923630.post-75028789388873539572007-10-27T04:05:00.000-07:002007-12-20T21:15:48.787-08:00புத்தகம் மூடிய மயிலிறகுவாழ்க்கையில் காதல் என்ற ஒன்று சுவாரசியமானது என்றால்... முதல் காதலைப் போல சுவாரசியமானது வேறென்ன இருக்க முடியும்... எனது முதல் காதலைப் பற்றியும் காதலியைப் பற்றியும் பேசுவதென்றால்..கொள்ளைப் பிரியம் எனக்கு.... ஆமாம்..புத்தகம் மீதான காதல்... புத்தகங்களோடு கொண்ட உறவுகளை அசைபோடுவதென்பது.... ஞாபக முடிச்சுக்களைப் பிடித்துக் கொண்டு இதயப் பள்ளத்தாக்கில் இறங்குவதைப் போல ஒரு அனுபவம்... படிப்பு என்பதொன்றும் என் பாட்டன் வீட்டு சொத்தல்ல... பிறகு எது என்னை புத்தகங்களின் பால் ஈர்த்தது... என் இதயத்தில் புத்தக வாசனையைச் சேர்த்தது என்று நிறைய சமயங்களில் மனம் பின்னோக்கி ஓடுவதுண்டு... சரி இப்போதேனும் விடைதேடிச் செல்வோம்...<br /><br />காவிரியாற்றங்கரையில் ஒரு சின்னஞ்சிறிய கிராமம் எங்களது...எல்லா கிராமத்துச் சிறுவர்களையும் போல பாடப் புத்தகத்துக்குள் குட்டி போடும் என்று மயிலிறகையும், புத்தி வர வேண்டும் என்று அரச இலையையும் சேர்த்து வைத்த யதார்த்தப் பிள்ளைப்பருவம் தான் எனக்கும்... புத்தகம் வாசித்தல் என்பது என்னளவில் அப்பொழுது சிறுவர் மலரில் வரும் புராணக்கதைகள் தாம்... பாடப்புத்தகங்களுக்கு நடுவில் சமயம் கிடைக்கின்ற போதெல்லாம் நான் வாசிக்கத் தொடங்கிய புத்தகங்கள் அவை தாம்.. இடையில் பள்ளி இறுதி ஆண்டுகளில் தேர்வு நோக்கியே சிந்திக்கின்ற சாமன்ய மனிதர்களில் ஒருவனானதால் புத்தகங்கள் குறித்த சிந்தனை என் மனதில் எழுந்திருக்க எத்தனை சதவீத வாய்ப்புக்கள் இருந்திருக்க முடியும் என்று எளிதாய் எல்லாரும் யோசித்து விட முடியும்...<br /><br />கல்லூரியில் இளம்பட்ட வகுப்புக்களில் சேர்ந்த பின்னர் நாம் ஏன் புத்தகங்கள் வாங்கி வாசிக்கக் கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது... புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டாலும்... யாருடைய புத்தகங்கள்... எதை வாசிப்பது என்ற எந்த இலக்கும் இல்லாது தொடங்கிற்று எனது வாசிப்பு பயணம்... நூலகத்தில் சேர்ந்து படிக்கலாம் என்ற எனது முயற்சி படுதோல்வியில் முடிந்ததால்.. நாமே சொந்தமாக காசு கொடுத்து தான் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது... இதுவும் கூட இலக்கு அறியாத முடிவுதான்.. ஏனென்றால்... என்னிடம் அப்போது சட்டைப்பையில் எத்தனை காசுகள் இருந்தன என்று கூட நான் "எண்ணிப்" பார்க்கவில்லை...<br /><br />புத்தகம் வாங்குவதற்கு கொடுத்த விலைகளை எண்ணிப் பார்க்கிற போதெல்லாம் கனத்துப் போகும் என் மனசு... 20 ரூபாய் புத்தகம் என்றால் ஒரு நாள் மதிய உணவை விலையாக கொடுத்த பொழுதுகள் அவை...முதன் முதலாக ஒரு புத்தகத்தை வாஙகிய பிறகு நான் அதைப் படித்ததை விட அழகுபார்த்து ரசித்ததும், வந்தோர் போனோரிடம் எல்லாம் பாரபட்சமின்றி காட்டிக் காட்டி பெருமைப்பட்டதும் தான் அதிகம்...எனது இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கத்தொடங்கியதில் என்னைக் கண்டதும் கூட நிறைய பேர் எதையோ வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தவர்கள் போல அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுக்கத்தொடங்கினார்கள்...<br /><br />தினமும் பட்டினி கிடந்து நான் புத்தகம் வாங்கும் செய்தி என் தந்தையின் காதுகளுக்கு எட்டியதும் அவர் உடனடியாக செய்த வேலை எனக்கு வீட்டில் இருந்தே உணவு எடுத்துச் செல்லுமாறு உத்தரவு பிறந்தது... சற்றும் மனம் சலிக்காது எனது அடுத்த முயற்சியில் இறங்கலானேன்... பயணத்திற்கு கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து கட்டை வண்டியிலும் மொட்டை வண்டியிலும் தொற்றிக் கொண்டு பயணித்து எனது லட்சியக் கனவை நிறைவேற்றிக்கொண்டேன்.. அடுத்த அடி காத்திருந்தது எனக்கு... அது மாதாந்திர பயண அட்டை வாங்கி கொடுத்தது தான்...என்ன செய்யலாம் என்ற என் மூளையின் யோசனைகளால் அவர்களுக்கு அடுத்த தொல்லை காத்திருந்தது...<br /><br />பண்டிகை நாட்களில் கொடுக்கப் படும் அன்பளிப்பு பணத்திற்காக காதிருக்க தொடங்கினேன்... காலில் விழுந்தால் காசு என்கிற மாபெரும் "அரசியல்" சூத்திரம் எனக்கு விளங்கியதும்... (புத்தகம் மீதான) காதலுக்காக காலில் விழுவது தப்பே இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு வேட்டையில் இறங்கினேன்... பண்டிகை நாட்களில் எங்கள் வீட்டில் கூடுகிற கூட்டத்தால் என் அலமாரியின் அடுக்குகள் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடும் தீபாவளி வெளியீடைப் போல நிறைய தொடங்கிய காலம் அது... புத்தக வெறியில் பொத்து பொத்தென்று நான் விழும் சேதி கேட்டு அடுத்த பண்டிகைக்கு வீடு வெள்ளிக்கிழமை கசாப்பு கடையைப் போல ஆனது... உபயம் சாட்சாத் நானே தான்...<br /><br />வைரமுத்துவின் கவிதைகளோடு தொடங்கிய எனது பயணத்தின் பாதை மேத்தா, கண்ணதாசன், பாவேந்தர், பாரதி, என்று விரியலாயிற்று.. பின்னர் நாவலாற்றங்கரைப் பக்கம் ஒதுங்கத் தொடங்கினேன்.. கட்டுரைகள், சுய முன்னேற்ற நூல்கள் என்று வகைக்கு சிலவற்றை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன்...<br /><br />புத்தகங்களொடு தொடர்புடைய வேறு சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தன...அவற்றையும் நானிங்கே சொல்லியே ஆக வேண்டும்... முதன் முதலாக என்னிடமிருந்து புத்தகம் வாங்கிச் சென்ற ஒருவர் புத்தகத்தின் மூலையை மடித்து மடித்து படித்ததால் மூலை மட்டும் தனியே வந்து விட.. கொழகொழப்பான ஏதோ ஒன்றைத் தடவி(அது எச்சிலா என்று இன்று வரை தெரியவில்லை) ஒட்டிக் கொடுத்து விட்டார்... என் கண்களில் இருந்து ரத்தம் வராத குறை ஒன்று தான்... அப்போது முடிவெடுத்தது தான்.. இனி இவருக்கு புத்தகம் கொடுப்பதில்லை என்று...<br />உடனடியாக அந்த புத்தகத்தின் மீது எழுதினேன் இப்படி..<br /><br />"இந்த காகிதப் பூக்களின்<br />காது மடல் திருகாதீர்... அது<br />என் கார்டியாக் கூட்டை<br />கசக்கி எறிவதைப் போல" என்று<br /><br />பின்னர் என்னிடம் இரவல் வாங்கி சென்ற பலரது முகவரிகளே இன்றும் தேடிக் கொண்டு இருக்கும்படி செய்து அடுத்த முடிவை எடுக்க வைத்தனர்.. அது வேறொன்றும் இல்லை யாருக்குமே புத்தகம் தருவதில்லை என்பது தான்..<br /><br />பின்னர் வயதும் முந்தைய அனுபவங்களும் சொல்லித்தந்த பாடங்கள் காரணமாய், புத்தகங்களுக்காக பகுதி நேரமாய் வாரக் கடைசிகளில் வேலை செய்ய ஆரம்பித்தேன்... வாழ்க்கை என் பாதைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்திய பின்னரும் புத்தகம் வாசிக்கின்ற காதல் குறையவேயில்லை... பா.விஜய், அறிவுமதி, யுகபாரதி, தாமரை, நா.முத்துக்குமார் என்று சமகாலக் கவிஞர்களின்மேல் நாட்டம் வளர்ந்தது...<br /><br />என்னைக் கண்டு ஓடியவர்கள் என்னை நோக்கிவரத் தொடங்கிய காலம் அது.. நான் கம்பனில்லை என்று தெரிந்தே என்னை புரந்த சடையப்ப வள்ளல்களை நான் சந்தித்தேன்... புத்தகம் குறித்த சிந்தனைகளை தெளிவுபடுத்திக்கொள்ளத் தொடங்கினேன்... இலக்கியம், கவிதை, என்ற ஒரே கோட்டில் செல்லாமல் சினிமா, வரலாறு, சமகாலச் சிந்தனைகள் என்று பாதை இன்னும் விரிந்துகொண்டே இருக்கின்றது... இப்போதெல்லாம் என் படுக்கையறையில் என் தலையணையில் என்னோடு சேர்ந்து உறங்கும் மற்றொரு ஜீவனாகவே ஆகி விட்டது புத்தகம்...<br /><br />இதயம் என்ற கண்ணாடிப் புட்டிக்குள் சேகரம் செய்துவைக்கும் எந்த உணர்வுகள் ஆனலும் சரி... இறக்கி வைக்காவிடில் ஒரு நாள் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடும் என்பதால் எனது சுகமான காதல் சுமைகளை கொஞ்சம் இறக்கி வைத்திருக்கிறேன்...<br /><br />இதை எல்லாம் சொல்வதால் யாரும் என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள எடுத்த முயற்சியாக எண்ண வேண்டாம்...<br />எனது முதல் எழுத்து கூட எதை நான் மிகவும் நேசிக்கிறேனோ, எதை நான் பெறப் போராடினேனோ.... எதை இன்றும் இதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறேனோ அதை பற்றியதாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்... எழுதினேன்...அவ்வளவே...<br /><br />காலம் என்னை புத்தகங்களொடு பிணைத்து வைத்திருக்கும் வரையில், வாசிப்பேன்... சிந்திப்பேன்...அதில் கொஞ்சம் இங்கேயும் சிந்துவேன்...Unknownnoreply@blogger.com2