(புல்லாங்குழல் செய்கின்ற மூங்கிலை "ஈத்தை" என்று சொல்வார்கள்...
இதில் முதல் கவிதை "ஈத்தை" என்ற தலைப்பிலேயே எழுதப்பட்டது.... ஆனால் வெறும் கூடு இசையை படைப்பவனால் குழல் ஆவதைப்போல... வெறும் வார்த்தைகள் கூட படிப்பவனால் கவிதை ஆகின்றன என்பது என் எண்ணம்... அதனால் இவைகளுக்குப் பொதுவாய் இதையே தலைப்பாகச் சூட்டியிருக்கிறேன்.....)
இறந்த பிறகும்
என் இரைப்பை நிறைப்பேன்...
உங்கள் இதயமென்னும்
கருப்பை நிறைக்க....
***************************************
வீதியே வெளிச்சம் இன்றித் தவிக்கிறது
கொஞ்சம் வெட்கப்படேன்...
****************************
நட்பு....
என்
இதயமென்னும் சிலுவையில்
இதை அறைந்தார்கள்...
அதிசயம்!!!
உயிர்த்தெழுந்தது
"சிலுவை"....
**************************
உருகி உருகி
ஒரு கவிதை செய்தேன்
உலகத்திற்காக...
பைத்தியம் என்றென்னை
பரிகசித்தார்கள்....
கலங்காது நானொரு
கவிதை செய்தேன்
உனக்கே உனக்காக...
கௌரவிக்க வந்த நீதான்
சொல்லிப்போனாய்
"பாவம் மனநோய்"என்று
"கௌரவமாய்..."
*******************
என்னடி கோபம்
என்மீது உனக்கு...
முன்போல் இப்போதெல்லாம்
நீ முகங்காட்டுவதேயில்லை...
பழகிய நாட்களின் நினைவுகளை
பதியன் போட்டாயே மனதில்...
மறந்தா போவேன்...
உன் முகம் பார்க்க அலையும்
எங்கள்
கிராமத்து நண்பர்கள் மனசு..
உன் தொலைபேசி எண்ணையாவது
கண்டுபிடித்துவிட துடிக்கிறார்
என் தந்தை...
உபதேசிக்கிறாள் அடிக்கடி
என் தாய்...
உன்னோடு நான் என்றும்
உரவாடலாகாதாம்...
பாவம்
அறிவாளா அவள்...
வாழ்க்கையே இல்லை
நீ
வராவிட்டால் என்று...
கடைசியாய்
கொடைக்கானல் மலையில்
பேருந்தின் பின்
ஆரத்தழுவி
என் இதயம் நனைத்தவளே....
மீண்டும்
மின்சாரம் தெரிக்கும்
உன் முத்ததுக்காய்
உடலெங்கும் உதடுகளாய் நான்...
மனசுவைக்க மாட்டாயா
"மழையே??'
***************************************
Tuesday, October 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment