*********************************************
உழுதுபோட்ட நிலம் என் இதயம்
அறுத்து முடிந்த நிலம் உன் இதயம்...
ஆம்..
என் வயலின் பரப்பில் எல்லாம்
உன் பாதத்தின் சுவடுகள்...
உன் வயலின் தாள்களில் எல்லாம்
என் பாதத்தின் ரத்தங்கள்...
*************************************
ஒரு குழந்தையைப் போல
என் இதயத்தோடு
நீ விளையாடுகிறாய்...
விளையாடிவிட்டு
உன் வீட்டுக்கும்
எடுத்துச்சென்று விடுகிறாய்...
ஒரு குழந்தையைப் போல
எதையாவது மறந்து
என் வீட்டில் விட்டுச் செல்...
நமது உலகத்தில் உள்ள
ஒரே விளையாட்டுப் பொருள்
இதயம் மட்டும் தானே....
********************************
எனது எந்தக் கவிதைக்கும்
பிள்ளையார் சுழி
உனது பெயர் தான்...
அது போதும்..
வயதுக்கு வந்த வார்த்தைகள்
என் வாசலில்
வரிசையில் நின்று ஏங்கும்...
***********************************
பற்றி எரிகிறது...
உன் விழிக்குளத்தில்
நான் விழும் வரையில்
ஈரமாகவே இருந்த
என் இதயம்....
************************************
ஒரு உலோபியின்
இரும்புப்பெட்டியாய்
உன் இருதயம்...
பூட்டிய சாவியோ
ஒளிந்து கொண்டிருக்கிறது
உதடுகளுக்குள்...
**************************************
நான் + நீ + காதல் = கவிதை
அட
கணக்குப் பாடம் இனிக்கிறது....
*****************************************
Friday, November 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment