எப்படி எழுதுகிறேன்
என்கிறாய்
நானெங்கே எழுதுகிறேன்??
இவையெல்லாம்
உன்னோடு
நான் பேசிய
கனவுகளில் இருந்து
களவாடியவை தானே....
*********************************************************
மூன்று நாட்களுக்கு
தேங்காய் உடைத்துவிட்டு
முடிந்த பிறகு
தெருவிலே உடைப்பதற்கு
விநாயகர் பொம்மை அல்ல
என் மனசு....
******************************************************
உனது கிராமத்து பெட்டிக் கடைகளில்
அதிகம் விற்பனையாவது
சோடா பாட்டில்கள் தான்..
நீ
நடந்து வந்த பாதைகளில்
மயங்கி விழுந்த இதயங்கள் மீது
உடைத்து
தெளித்து
எழுப்பி
உட்காரவைக்க.....
**********************************************
ஓ மருத்துவர்களே
இதயநோயாளிகளை எல்லாம்
காதலிக்கச் சொல்லுங்கள்....
இதயமே இல்லாமல்
வாழப் பழக
அது ஒன்றே தான் வழி....
***********************************************
மது
எல்லாவற்றையும்
மறக்கச் செய்கிறது....
காதலோ
உன்னைத் தவிர
எல்லாவற்றையும்
மறக்கச் செய்கிறது.....
இது கொஞ்சம்
விநோதமான போதை.....
************************************************
Sunday, November 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment