Sunday, November 18, 2007

க‌ன‌வுக‌ளில் இருந்து க‌ள‌வாடிய‌வை..

எப்படி எழுதுகிறேன்
என்கிறாய்

நானெங்கே எழுதுகிறேன்??

இவையெல்லாம்
உன்னோடு
நான் பேசிய‌
கனவுகளில் இருந்து
களவாடியவை தானே....
*********************************************************

மூன்று நாட்க‌ளுக்கு
தேங்காய் உடைத்துவிட்டு

முடிந்த‌ பிற‌கு
தெருவிலே உடைப்ப‌த‌ற்கு

விநாய‌க‌ர் பொம்மை அல்ல‌
என் ம‌ன‌சு....

******************************************************
உன‌து கிராம‌த்து பெட்டிக் க‌டைக‌ளில்

அதிக‌ம் விற்ப‌னையாவ‌து
சோடா பாட்டில்க‌ள் தான்..

நீ
ந‌ட‌ந்து வ‌ந்த‌ பாதைக‌ளில்
ம‌ய‌ங்கி விழுந்த இத‌ய‌ங்க‌ள் மீது

உடைத்து
தெளித்து
எழுப்பி
உட்கார‌வைக்க‌.....

**********************************************

ஓ ம‌ருத்துவ‌ர்க‌ளே
இத‌ய‌நோயாளிக‌ளை எல்லாம்
காத‌லிக்க‌ச் சொல்லுங்க‌ள்....

இத‌ய‌மே இல்லாம‌ல்
வாழப் ப‌ழ‌க‌
அது ஒன்றே தான் வ‌ழி....

***********************************************
ம‌து

எல்லாவ‌ற்றையும்
ம‌ற‌க்க‌ச் செய்கிற‌து....

காத‌லோ
உன்னைத் த‌விர‌
எல்லாவ‌ற்றையும்
ம‌ற‌க்க‌ச் செய்கிற‌து.....

இது கொஞ்ச‌ம்
விநோத‌மான‌ போதை.....

************************************************

No comments: