உன் தெருவின்
அத்தனை வீட்டு வாசலிலும்
பூக்கோலம்...
உன்
ஒருத்தியின் வீட்டில்
மட்டும் தான்
பூவே வரைந்த கோலம்...
**********************************
உனது வீட்டை
அடையாளம் கண்டுபிடிப்பது
ரொம்பவே சுலபம்...
தபால்காரன் கூட
இதயத்தை மட்டுமே தந்துவிட்டுப் போகிறானே
இது தானே
உன் வீடு....
******************************************
எப்போதாவது
பொட்டுவைக்க மறந்து
நீ கல்லூரிக்கு வரும் நாட்கள்
அறிமுகம் செய்துவைத்தன
எங்களுக்கு......
அமாவாசையையும்
பௌர்ணமியையும்....
*****************************************
உனக்கே தெரியாமல்
உன் நோட்டுப்புத்தகத்தை
திருடியிருக்கிறேன்......
நாங்கள் எல்லாம்
நோட்டுப்புத்தகத்தில்
மயிலிறகு வளர்க்கும்போது
ஒரு மயில்
தன் பாடப்புத்தகத்தில்
எதை வளர்க்கிறது
எனத் தெரிந்துகொள்ளும்
ஆவலில்.......
*****************************************
எந்த வடிவத்தில் கும்பிட்டாலும்
சாமி சாமியே தான்...
எந்த உடையில் நீ வந்தாலும்
அழகு அழகே தான்....
***************************************
சீக்கிறம் ஏறு...
உன் வருகைக்காக
காத்திருந்து காத்திருந்து....
"நகராப்" பேருந்து ஆகிவிட்டது
நகரப் பேருந்து...
******************************************
திருக்குறளை விட
மிகச் சிறிய கவிதையை
சொல்ல வேண்டும் என்றார்
தமிழாசிரியர்...
மனசுக்குள்
சொல்லிப்பார்த்துக் கொண்டேன்
உன் பெயரை.....
*************************************
என்னோடு
சண்டையிட்டுக்கொண்டு
நீ பேசாத நாட்களில்
உணர்ந்தேன்....
உலகின்
மிகக் கொடிய நோய்
சர்க்கரைவியாதி என்று....
*************************************
அம்மையப்பனை
மூன்று முறை சுற்றி
வந்ததும்
கனி கிடைத்துவிட்டது
விநாயகருக்கு....
உன்னையே
எத்தனை முறை சுற்றினாலும்
கனிவதேயில்லை
உன் மனசு...
********************************
எட்டாத தொலைவில் இருந்தாலும்
சூரியனை தரிசிக்கிர
உலகத்தைப் போல
எட்ட இருந்தே
உன்னை ஸ்பரிசிக்க முடியும்
என்னால்.....
********************************
எந்தக் கனவிலும்
உன் முகம் தெரிவதே இல்லை...
இதற்காக தினமும்
கனவு கண்டு தோற்றது தான்
மிச்சம்...
உயிர்த்துடிப்பு மாதிரி
நீ
உயிரை வாங்குகிற துடிப்பு.....
*******************************
Tuesday, December 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
engayooo poitteenga krishnan..
romba nalla irukku
Post a Comment