***********************
என் இதயத்தில்
நீ போட்ட
கண்ணெழுத்துக்களின்
பிம்பத்தைத் தான்
கவிதை என்கிறது
இந்த உலகம்....
*************************
ஒவ்வொரு முறையும்
என் உறக்கத்தில் மட்டும்
வந்து போகிறாயே.....
காதல் கண்மூடித்தனமானது
என்பது இது தானா??
**************************
தண்டவாளக் கம்பிகள்
நாம்....
நம் ஒவ்வொரு இணைவும்
பிரிவுக்காக....
நம் ஒவ்வொரு பிரிவும்
இணைவிற்காகவே....
**************************
உன் பார்வையில் இருந்து
தப்ப முடியாமல்
சரணடைகிறேன்...
நீயே வந்து என்னை
கைது செய்து போ....
கையோடு கொண்டு வந்திருக்கிறேன்
காதல் விலங்கு....
****************************
காதல் தெய்வீகமானது....
ஆம்
அதனால் தான்
பாறாங்கல்லில் கூட
கடவுளைப் பார்க்க முடிகிறது...
*****************************
நீ
மஞ்சள் தாவணி உடுத்தும்
நாட்களில் எல்லாம்
வெள்ளை ரோஜாக்களுக்கும்
மஞ்சள் காமாலை தான்....
****************************
இருட்டைத் தொலைத்த
ஒவ்வொரு விளக்கும் சொன்னது
நீ முத்தமிட்ட கதையை....
இறக்கை தொலைத்த
ஒவ்வொரு விட்டிலும் சொன்னது
உன்னை முத்தமிட்ட கதையை....
****************************
உன் மனதில் நான்
இல்லை என்பதற்காக
நீ அனுப்பிய
வெற்றுக் காகிதத்தைக்கூட....
உன் மனசு
வெள்ளை என்றே புரிந்துகொள்கிறது
உன் மேலான
என் காதல்......
*********************************
உன் கூந்தலில் இருந்து
உதிரும் வரையிலான
காலத்தை....
கோலாகலமாக கொண்டாடுகின்றன
பூக்கள்...
'விழாக்'காலம் என்று...
************************************
Wednesday, December 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ennudaya Rating.
1.kaadhal kaNmuudithanam
2.veLLai kaagitham
3.kaadhal vilangu.
ungal kaadhal kavithaigal..periya aLavil kandippaaga pesappadum.
en vaazhthukkuL.
Krishnan,
Unnududiya manathil onnurm illai enpthai....lines really gud.
While reading your collection, all are not written in IMGINATION, seems to be very practically.
Great...Keep ahead.
Rgs. Shankar
Post a Comment