Tuesday, January 22, 2008

மருதாணிச்செடியில் பூத்த மல்லிகை

உன்னைப் பார்த்து
தெரிந்துகொண்டது
இந்த உலகம்.....

ம‌ருதாணிச் செடியிலும்
ம‌ல்லிகைப்பூ பூக்கும் என்று....

************************************

பாதரசத்தில் கரையாத‌
தங்கமும் கூட இருக்கிறது

உன்
பாதக் கொலுசுகளில்....

************************************

காற்றில் ப‌ட‌ப‌ட‌க்கும்
உன் சிவ‌ப்புத் துப்ப‌ட்டா
அறிவிக்கிற‌து.....

காத‌ல்
மைய‌ம் கொள்ளப் போகிறது
என்று....

*********************************

இர‌வில் வெளியே செல்ல‌

உன‌க்கு அச்ச‌மாக‌ இருக்கிற‌து
இர‌வுக்கு ஆசையாக‌ இருக்கிற‌து
நிலாவுக்கோ பொறாமையாக‌ இருக்கிற‌து....

*********************************

உன்னிட‌ம் தோற்றுப் போகிற‌
ஆட்ட‌ங்க‌ளிலும்

தாய‌க்க‌ட்டை
என‌க்கு
ஆதாய‌க்க‌ட்டை தான்......

**********************************

நீ
குளித்துவிட்டுப் போயிருக்கிறாய்...

இல்லை
ஒரு ஆற்றை திருவையாறாக‌
மாற்றிவிட்டு போகிறாய்........

**********************************

நான்
யாரைக் காதலிக்கிறேன்
எனக் கேட்டார்கள்...

கவிதையை என்றேன்..

உனக்கு தெரியுமே
எனக்கு
பொய் சொல்லவே வராது என்று....

**********************************

ஒரு க‌ல்லூரியே
காத‌ல் தேர்வு
எழுதிக்கொண்டிருக்கிற‌து....

எல்லாம்
"மதி"ப்பெண்ணுக்காக‌த் தான்...

***********************************

கொடியில் காய்கிற‌
உன் ஆடைக‌ளை
க‌ள‌வாடுகிற‌தே...

இது தான்
ப‌ருவ‌க் காற்றா???

**********************************

காத‌லைச் சொல்ல‌ வெட்க‌ப்ப‌ட்டு
உன் கால்விர‌லால் நீ
கோல‌மிட்ட‌ இட‌த்தில்
முளைத்திருக்கிற‌து

ஒரு அழ‌கிய‌
ம‌ருதாணிச் செடி....

********************************

குளிக்கும் போது
நீ கொலுசுக‌ளைக் க‌ழ‌ற்றுகிறாய்
ந‌தி மாட்டிக்கொள்ளுகிற‌து....


********************************

1 comment:

Prakash said...

krishnan
idhu varaikkum neenga ezhuthinathuleeyeee..enakku romba pidichaathu idhu thaaan...

so sweet.. ellaameee..rasikkaaa vaikkirathu...thirumba thirumba padikka vaithathu!!!...arumai..

unmailayee..ada ! poda vaikkirathu.
ungal karpanaiyil nalla therchi..

vaazhththukkaal..
neengal ungal paathiyai noki seeeRaana vegathil sariyaaga senDru kondu irukkureergaL!!...

anbudan
prakash