உன்னைப் பார்த்து
தெரிந்துகொண்டது
இந்த உலகம்.....
மருதாணிச் செடியிலும்
மல்லிகைப்பூ பூக்கும் என்று....
************************************
பாதரசத்தில் கரையாத
தங்கமும் கூட இருக்கிறது
உன்
பாதக் கொலுசுகளில்....
************************************
காற்றில் படபடக்கும்
உன் சிவப்புத் துப்பட்டா
அறிவிக்கிறது.....
காதல்
மையம் கொள்ளப் போகிறது
என்று....
*********************************
இரவில் வெளியே செல்ல
உனக்கு அச்சமாக இருக்கிறது
இரவுக்கு ஆசையாக இருக்கிறது
நிலாவுக்கோ பொறாமையாக இருக்கிறது....
*********************************
உன்னிடம் தோற்றுப் போகிற
ஆட்டங்களிலும்
தாயக்கட்டை
எனக்கு
ஆதாயக்கட்டை தான்......
**********************************
நீ
குளித்துவிட்டுப் போயிருக்கிறாய்...
இல்லை
ஒரு ஆற்றை திருவையாறாக
மாற்றிவிட்டு போகிறாய்........
**********************************
நான்
யாரைக் காதலிக்கிறேன்
எனக் கேட்டார்கள்...
கவிதையை என்றேன்..
உனக்கு தெரியுமே
எனக்கு
பொய் சொல்லவே வராது என்று....
**********************************
ஒரு கல்லூரியே
காதல் தேர்வு
எழுதிக்கொண்டிருக்கிறது....
எல்லாம்
"மதி"ப்பெண்ணுக்காகத் தான்...
***********************************
கொடியில் காய்கிற
உன் ஆடைகளை
களவாடுகிறதே...
இது தான்
பருவக் காற்றா???
**********************************
காதலைச் சொல்ல வெட்கப்பட்டு
உன் கால்விரலால் நீ
கோலமிட்ட இடத்தில்
முளைத்திருக்கிறது
ஒரு அழகிய
மருதாணிச் செடி....
********************************
குளிக்கும் போது
நீ கொலுசுகளைக் கழற்றுகிறாய்
நதி மாட்டிக்கொள்ளுகிறது....
********************************
Tuesday, January 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
krishnan
idhu varaikkum neenga ezhuthinathuleeyeee..enakku romba pidichaathu idhu thaaan...
so sweet.. ellaameee..rasikkaaa vaikkirathu...thirumba thirumba padikka vaithathu!!!...arumai..
unmailayee..ada ! poda vaikkirathu.
ungal karpanaiyil nalla therchi..
vaazhththukkaal..
neengal ungal paathiyai noki seeeRaana vegathil sariyaaga senDru kondu irukkureergaL!!...
anbudan
prakash
Post a Comment