என் காதலை
முழுதுமாய் அறிந்தவர்
யாருமில்லை
என் தலையணையைத் தவிர......
***************************************
உன் கொலுசு
மணி ஒலிக்கும் போதெல்லாம்
கண்களுக்குள்
கற்பூரம் ஏற்றுகிறது
காதல்....
***************************************
நீ வரும் வரையில்
பொறுப்பதேயில்லை...
நான் மட்டுமல்ல
என் கவிதையும் தான்...
*************************************
நட்சத்திரங்களைப் பூக்கிறது
மொட்டைமாடி ரோஜாச்செடி....
அருகில் சென்று
கூந்தல் உலர்த்தினாயா?
************************************
ஆயிரம் முறை
சொல்லிவிட்டாய்
"அப்புறம்" என்று....
ஒரே ஒரு முறை சொல்
உன் காதலை...
************************************
பூக்களைப் பறித்தால்
வலிக்கும் என்கிறது
ஆனால்
மரத்தில் பெயரைச்
செதுக்கிவைக்கிறது....
என்ன காதலோ???
***********************************
உங்களுக்கு மிகவும் பிடித்த
கவிஞர் யார்? என்கிறாய்...
யாராய் இருக்க முடியும்
இத்தனை அழகாய் உன்னை எழுதிய
உன் அம்மாவைத் தவிர.....
*************************************
தெய்வத்தைப் பார்த்தால் அல்ல
தேவதையைப் பார்த்தாலும்
அருள் வரும் என்று
தெரிந்து கொண்டேன்...
நீ என்னைக் கடந்து போன போது.........
***************************************
படிக்கப்படாமலேயே இருக்கின்றன
நீ எனக்களித்த முதல் புத்தகமும்
நான் உனக்கெழுதிய முதல் கடிதமும்....
****************************************
உன் துப்பட்டா
என் மேல்
எங்கு மோதினாலும்
வீங்குவதென்னவோ
என் இதயம் தான்......
***************************************
உன்னை விட்டுவிட்டு
சாப்பிட்டால்
எனக்கு வயிறுவலிக்கும்
என்கிறாயே....
என்னை விட்டுவிட்டு
இருக்கிறாயே
உனக்கு இதயமே வலிக்காதா??
***************************************
நீ பூப்பந்து ஆடும்போதெல்லாம்
பயமாய் இருக்கிறது எனக்கு
எல்லைக் கோட்டைத் தாண்டி
விழுந்துவிடுமோ
என் மனசு என்று.....
***************************************
2 comments:
Krish
As usual. Kalakkals.
"aruL varum" kavithai thaan enakku romba pidichu irukku.
4 varikkuL ..ore oru uvamaiyoodu kavithai solluvathu enna special endru therindu koLLa aasai...badhil kidaikkumaa?
ஆயிரம் முறை
சொல்லிவிட்டாய்
"அப்புறம்" என்று....
ஒரே ஒரு முறை சொல்
உன் காதலை...
" மிக நன்று உணர்தவர்களுக்கு மட்டுமே "
Post a Comment