Wednesday, January 23, 2008

த‌லைய‌ணை விடு தூது...

உன்னிடம் தூது செல்ல‌
என் காதலை
முழுதுமாய் அறிந்தவர்
யாருமில்லை

என் தலையணையைத் தவிர......

***************************************

உன் கொலுசு
மணி ஒலிக்கும் போதெல்லாம்

கண்களுக்குள்
கற்பூரம் ஏற்றுகிறது
காதல்....

***************************************

நீ வரும் வரையில்
பொறுப்பதேயில்லை...

நான் மட்டுமல்ல‌
என் கவிதையும் தான்...

*************************************

நட்சத்திரங்களைப் பூக்கிறது
மொட்டைமாடி ரோஜாச்செடி....

அருகில் சென்று
கூந்த‌ல் உல‌ர்த்தினாயா?

************************************

ஆயிர‌ம் முறை
சொல்லிவிட்டாய்
"அப்புற‌ம்" என்று....

ஒரே ஒரு முறை சொல்
உன் காத‌லை...

************************************

பூக்களைப் பறித்தால்
வ‌லிக்கும் என்கிற‌து

ஆனால்
ம‌ர‌த்தில் பெய‌ரைச்
செதுக்கிவைக்கிற‌து....

என்ன‌ காத‌லோ???

***********************************

உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த
க‌விஞர் யார்? என்கிறாய்...

யாராய் இருக்க‌ முடியும்
இத்த‌னை அழ‌காய் உன்னை எழுதிய‌
உன் அம்மாவைத் த‌விர‌.....

*************************************

தெய்வ‌த்தைப் பார்த்தால் அல்ல‌
தேவ‌தையைப் பார்த்தாலும்
அருள் வ‌ரும் என்று
தெரிந்து கொண்டேன்...

நீ என்னைக் க‌ட‌ந்து போன‌ போது.........

***************************************

ப‌டிக்க‌ப்ப‌டாம‌லேயே இருக்கின்றன‌

நீ என‌க்க‌ளித்த‌ முத‌ல் புத்த‌க‌மும்
நான் உன‌க்கெழுதிய‌ முத‌ல் க‌டித‌மும்....

****************************************

உன் துப்ப‌ட்டா
என் மேல்
எங்கு மோதினாலும்

வீங்குவ‌தென்ன‌வோ
என் இத‌ய‌ம் தான்......

***************************************

உன்னை விட்டுவிட்டு
சாப்பிட்டால்
என‌க்கு வ‌யிறுவ‌லிக்கும்
என்கிறாயே....

என்னை விட்டுவிட்டு
இருக்கிறாயே
உன‌க்கு இத‌ய‌மே வ‌லிக்காதா??

***************************************

நீ பூப்ப‌ந்து ஆடும்போதெல்லாம்
ப‌ய‌மாய் இருக்கிற‌து என‌க்கு

எல்லைக் கோட்டைத் தாண்டி
விழுந்துவிடுமோ
என் ம‌ன‌சு என்று.....

***************************************

2 comments:

Prakash said...

Krish
As usual. Kalakkals.
"aruL varum" kavithai thaan enakku romba pidichu irukku.

4 varikkuL ..ore oru uvamaiyoodu kavithai solluvathu enna special endru therindu koLLa aasai...badhil kidaikkumaa?

Unknown said...

ஆயிர‌ம் முறை
சொல்லிவிட்டாய்
"அப்புற‌ம்" என்று....

ஒரே ஒரு முறை சொல்
உன் காத‌லை...

" மிக நன்று உணர்தவர்களுக்கு மட்டுமே "