கைகளில் ஏந்திக்கொள்
இல்லையேல்
அணைத்துவிட்டாவது போ..
முனகிக் கொண்டேயிருக்கிறோம்
செல்பேசியும் நானும்...
******************************
இந்த உலகிற்கு வருவதற்காக
நீ உடைத்தது
உன் தாயின் பனிக்குடத்தையா?
இல்லை பாற்குடத்தையா?
***********************
என்னுடைய தவங்கள் எல்லாம்
உன்னிடம் வரம் வாங்க அல்ல
உன்னையே வரமாய் வாங்கத்தான்...
*********************************
கடிதத்தின் மீது ஒட்டியிருக்கும்
அஞ்சல் தலை மாதிரி
இதயத்தில் நீ
எடுத்துவிட்டால் மதிப்பில்லை அதற்கு....
********************************
உன் இதழ்களின் அழைப்புக்காக
காத்திருந்தபோது தான் வந்தது
உன் அழைப்பிதழ்
"அவசியம் வருக" என்ற வாசகத்துடன்...
*********************************
பூங்காக்களில்
காதலைச் சொல்லலாம் தான்...
ஆனால்
பூங்காவிடமே எப்படி??
*********************************
உன்னால் சாமிகளுக்குள் சண்டை...
நீ மார்போடு அணைத்து வரும்
பரீட்சை அட்டையில்
யார் இடம் பிடிப்பது என்று...
***********************************
தூங்கும் குழந்தை சிரித்தால்
கனவில் கடவுள் வந்ததாக சொல்கிறார்களே
நான் தூக்கத்தில் கண்ணடிக்கிறேனாம்
நீ தானே வந்தது...??
**********************************
சாப்பிடும் போது நீ
சாமிக்கு என்று சொல்லி
தனியே எடுத்துவைக்கிறாய்...
நானோ
உனக்கு என்று சொல்லி
வாயில் போட்டுக்கொள்கிறேன்...
நீ இருப்பது என்னுள் தானே...
*********************************
கனவுகளில் மிரட்டிவிட்டுப் போகின்றன
தேவதைகள்...
எங்கள் வீட்டுப் பெண்ணை
எப்படி நீ காதலிக்கலாம் என்று...
************************************
சூரியனுக்கு தமிழன்
பொங்கல் வைக்கிறான்..
நீயோ
தமிழனையே
பொங்க வைக்கிறாய்.......
**********************************
Wednesday, January 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கைகளில் ஏந்திக்கொள்
இல்லையேல்
அணைத்துவிட்டாவது போ..
முனகிக் கொண்டேயிருக்கிறோம்
செல்பேசியும் நானும்...
"விக்கி கொண்டு இருக்கிறேன் நானும் சேர்த்து "
என்னுடைய தவங்கள் எல்லாம்
உன்னிடம் வரம் வாங்க அல்ல
உன்னையே வரமாய் வாங்கத்தான்..
"வரங்களே சாபங்கலாகும் போது இங்கு தவங்கள் எதற்காக..."
Post a Comment