Saturday, February 2, 2008

மௌனத்தின் பட்டிமன்றம்

நீ என்னைத்
தள்ளிவிட்ட இடத்தில்
என்னைத் தாங்கிப் பிடித்துகொண்ட‌து
காத‌ல்...

*********************************

ந‌ம் இருவ‌ருக்கும்
இடையில் வ‌ர‌
யாருக்கும் துணிவில்லை

காத‌லைத் த‌விர‌....

*******************************

ஆப்பிள் ம‌ர‌ம்
அப்ப‌டியே தான் இருக்கிற‌து...

நியூட்ட‌ன்க‌ள் தான்
விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்
காத‌லில்....

******************************

இத‌ய‌த்தில் த‌ரைத‌ட்டி நிற்கிற‌து

நேற்று பெய்த‌ ம‌ழையில்
நீ மித‌க்க‌விட்டு ம‌கிழ்ந்த‌
க‌த்திக்க‌ப்ப‌ல்.....

************************

நாம் இருவ‌ருமே
ச‌த்த‌மாக‌ பேசிக்கொண்டிருக்கிறோம்...

யார் முத‌லில் பேசுவ‌து
என்ற‌
மௌன‌த்தின் ப‌ட்டிம‌ன்ற‌த்தில்....

******************************

நீ ஆசையாய் வ‌ளர்க்கும்
பூச்செடிக‌ள் பூத்திருக்கின்ற‌ன‌...

என் காத‌லுக்கா?
என் காதுக‌ளுக்கா?

*****************************

பூக்கோல‌த்துக்கு ந‌டுவே
புள்ளிக‌ள்..

ம‌ச்ச‌ம்...

******************************

கோயில் யானை
உன்னை ஆசீர்வ‌தித்த‌து...

உன் க‌ன்ன‌த்தில் துதிக்கையை வைத்து...

*******************************

ப‌ட்டாம் பூச்சி பிடிக்க‌த் திரிந்த‌வ‌ன்
நான்...

ப‌ட்டாம் பூச்சியாக்கி திரிய‌விட்டிருக்கிறாய்
நீ....

******************************

தூண்டில்கார‌ர்க‌ளை பிடிப்ப‌த‌ற்காக‌வே
வ‌ள‌ர்ந்திருக்கின்ற‌ன‌

உன் விழி மீன்க‌ள்....


****************************

பார்த்துப் போ...

தேர் வ‌ருகிற‌து என்று தெரிந்து
வ‌ழியில்
முண்டிய‌டிக்கின்ற‌ன‌
முல்லைக் கொடிக‌ள்....

**************************

2 comments:

Unknown said...

ஆப்பிள் ம‌ர‌ம்
அப்ப‌டியே தான் இருக்கிற‌து...

நியூட்ட‌ன்க‌ள் தான்
விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்
காத‌லில்....

"நன்று நல்ல முயற்சி "

பார்த்துப் போ...

தேர் வ‌ருகிற‌து என்று தெரிந்து
வ‌ழியில்
முண்டிய‌டிக்கின்ற‌ன‌
முல்லைக் கொடிக‌ள்....

நன்று அருமை "பாரி எங்கே "

Unknown said...

ந‌ம் இருவ‌ருக்கும்
இடையில் வ‌ர‌
யாருக்கும் துணிவில்லை

காத‌லைத் த‌விர‌....



"Very nice....But u forgot onething,Ur Dad also will come between u people...(Just for fun)"