நீ என்னைத்
தள்ளிவிட்ட இடத்தில்
என்னைத் தாங்கிப் பிடித்துகொண்டது
காதல்...
*********************************
நம் இருவருக்கும்
இடையில் வர
யாருக்கும் துணிவில்லை
காதலைத் தவிர....
*******************************
ஆப்பிள் மரம்
அப்படியே தான் இருக்கிறது...
நியூட்டன்கள் தான்
விழுந்து கொண்டிருக்கிறார்கள்
காதலில்....
******************************
இதயத்தில் தரைதட்டி நிற்கிறது
நேற்று பெய்த மழையில்
நீ மிதக்கவிட்டு மகிழ்ந்த
கத்திக்கப்பல்.....
************************
நாம் இருவருமே
சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறோம்...
யார் முதலில் பேசுவது
என்ற
மௌனத்தின் பட்டிமன்றத்தில்....
******************************
நீ ஆசையாய் வளர்க்கும்
பூச்செடிகள் பூத்திருக்கின்றன...
என் காதலுக்கா?
என் காதுகளுக்கா?
*****************************
பூக்கோலத்துக்கு நடுவே
புள்ளிகள்..
மச்சம்...
******************************
கோயில் யானை
உன்னை ஆசீர்வதித்தது...
உன் கன்னத்தில் துதிக்கையை வைத்து...
*******************************
பட்டாம் பூச்சி பிடிக்கத் திரிந்தவன்
நான்...
பட்டாம் பூச்சியாக்கி திரியவிட்டிருக்கிறாய்
நீ....
******************************
தூண்டில்காரர்களை பிடிப்பதற்காகவே
வளர்ந்திருக்கின்றன
உன் விழி மீன்கள்....
****************************
பார்த்துப் போ...
தேர் வருகிறது என்று தெரிந்து
வழியில்
முண்டியடிக்கின்றன
முல்லைக் கொடிகள்....
**************************
Saturday, February 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆப்பிள் மரம்
அப்படியே தான் இருக்கிறது...
நியூட்டன்கள் தான்
விழுந்து கொண்டிருக்கிறார்கள்
காதலில்....
"நன்று நல்ல முயற்சி "
பார்த்துப் போ...
தேர் வருகிறது என்று தெரிந்து
வழியில்
முண்டியடிக்கின்றன
முல்லைக் கொடிகள்....
நன்று அருமை "பாரி எங்கே "
நம் இருவருக்கும்
இடையில் வர
யாருக்கும் துணிவில்லை
காதலைத் தவிர....
"Very nice....But u forgot onething,Ur Dad also will come between u people...(Just for fun)"
Post a Comment