Friday, February 8, 2008

நந்தவன நிலா..

இரவில் பூக்கும்
வெளிச்சப் பூக்கள்
இரவல் கேட்கின்றன‌
நறுமணத்தை

உன் கூந்தலில்
குடியேறும் ஆசையில்

*********************************

குயில்க‌ள் கூடித்
தீர்மான‌ம் போட்டிருக்கின்ற‌ன‌...

உன் வீட்டு
குளிய‌ல‌றையில்
கூடுக‌ட்டிக் கொள்வ‌தென்று...

**********************************

ஆளுந‌ர் கையெழுத்து
இல்லையேல்
செல்லாக்காசாம்

இத‌யத்தில் கையெழுத்திடு...

********************************

ஒரு க‌ன்ன‌த்தில் அறைந்தால்
ம‌று க‌ன்ன‌த்தை காட்டுவேன்

ஓங்கி அறைந்திருக்கிறாய்
உன் க‌ண்க‌ளால்
என் ஒற்றை இத‌ய‌த்தில்..

**********************************

என் இத‌ய‌ம்
திற‌ந்த‌ புத்த‌க‌மென்று
யார் உன‌க்கு சொன்ன‌து?

புர‌ட்டி எடுத்துவிட்டு செல்கிறாயே

*******************************

இத‌ய‌த்திற்கு
எந்த‌ க‌ண்ணாடியிட்டு
ம‌றைப்ப‌து

காத‌ல் வ‌லி ப‌ர‌வாம‌ல் த‌டுக்க‌.

*******************************

நீ
புத்த‌க‌மா?
புல்லாங்குழலா?
தெரிய‌வில்லை

ஆனால்
தீர்மானித்து விட்டேன்
"வாசிப்ப‌து" என்று..

****************************

செவ்வாயில்
ப‌னிக்க‌ட்டி இல்லை என்று
யார் சொன்ன‌து?

நீ தான் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயே..

********************************

காத‌ல் நிர்ண‌ய‌ம் செய்கிற‌து

முத‌லெழுத்துக்க‌ளையும்
த‌லையெழுத்துக்க‌ளையும்

********************************

கைக‌ளில் கோரிக்கை ம‌னுவோடு
காத்திருக்கிறேன்...

நீ ஏற்றுக்கொண்டால்
நான் ஆயுள்கைதி
நிராக‌ரித்தால்
நான் தூக்குக் கைதி...

******************************

ஒவ்வொரு அரிசியிலும்
அதை உண்ப‌வ‌ன் பெய‌ர்
எழுதியிருக்கிற‌து...

ஒவ்வொரு பூவிலும்
உன் பெய‌ர் தான் இருக்கிற‌து...

******************************

உன்னை முத‌லில்
என் அம்மாவிட‌ம் தான்
அறிமுக‌ப்ப‌டுத்த‌வேண்டும்..

அவ‌ள் தான்
உன் வீதியில் என்னை
"பார்த்துப் போ"
என்று சொல்லிய‌னுப்பிய‌து....

******************************

1 comment:

Unknown said...

காத‌ல் நிர்ண‌ய‌ம் செய்கிற‌து

முத‌லெழுத்துக்க‌ளையும்
த‌லையெழுத்துக்க‌ளையும்

"ஏதோ ஒரு தமிழ் பாடலை நினைவூட்டுகிறது "


ஒவ்வொரு அரிசியிலும்
அதை உண்ப‌வ‌ன் பெய‌ர்
எழுதியிருக்கிற‌து...

ஒவ்வொரு பூவிலும்
உன் பெய‌ர் தான் இருக்கிற‌து...

"புரியவில்லை உளுபவனா அல்லது உன்பவனா"