இரவில் பூக்கும்
வெளிச்சப் பூக்கள்
இரவல் கேட்கின்றன
நறுமணத்தை
உன் கூந்தலில்
குடியேறும் ஆசையில்
*********************************
குயில்கள் கூடித்
தீர்மானம் போட்டிருக்கின்றன...
உன் வீட்டு
குளியலறையில்
கூடுகட்டிக் கொள்வதென்று...
**********************************
ஆளுநர் கையெழுத்து
இல்லையேல்
செல்லாக்காசாம்
இதயத்தில் கையெழுத்திடு...
********************************
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டுவேன்
ஓங்கி அறைந்திருக்கிறாய்
உன் கண்களால்
என் ஒற்றை இதயத்தில்..
**********************************
என் இதயம்
திறந்த புத்தகமென்று
யார் உனக்கு சொன்னது?
புரட்டி எடுத்துவிட்டு செல்கிறாயே
*******************************
இதயத்திற்கு
எந்த கண்ணாடியிட்டு
மறைப்பது
காதல் வலி பரவாமல் தடுக்க.
*******************************
நீ
புத்தகமா?
புல்லாங்குழலா?
தெரியவில்லை
ஆனால்
தீர்மானித்து விட்டேன்
"வாசிப்பது" என்று..
****************************
செவ்வாயில்
பனிக்கட்டி இல்லை என்று
யார் சொன்னது?
நீ தான் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயே..
********************************
காதல் நிர்ணயம் செய்கிறது
முதலெழுத்துக்களையும்
தலையெழுத்துக்களையும்
********************************
கைகளில் கோரிக்கை மனுவோடு
காத்திருக்கிறேன்...
நீ ஏற்றுக்கொண்டால்
நான் ஆயுள்கைதி
நிராகரித்தால்
நான் தூக்குக் கைதி...
******************************
ஒவ்வொரு அரிசியிலும்
அதை உண்பவன் பெயர்
எழுதியிருக்கிறது...
ஒவ்வொரு பூவிலும்
உன் பெயர் தான் இருக்கிறது...
******************************
உன்னை முதலில்
என் அம்மாவிடம் தான்
அறிமுகப்படுத்தவேண்டும்..
அவள் தான்
உன் வீதியில் என்னை
"பார்த்துப் போ"
என்று சொல்லியனுப்பியது....
******************************
Friday, February 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காதல் நிர்ணயம் செய்கிறது
முதலெழுத்துக்களையும்
தலையெழுத்துக்களையும்
"ஏதோ ஒரு தமிழ் பாடலை நினைவூட்டுகிறது "
ஒவ்வொரு அரிசியிலும்
அதை உண்பவன் பெயர்
எழுதியிருக்கிறது...
ஒவ்வொரு பூவிலும்
உன் பெயர் தான் இருக்கிறது...
"புரியவில்லை உளுபவனா அல்லது உன்பவனா"
Post a Comment